ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு
நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.
என் கல்லூரியில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. இங்கே.
பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும் – தலைப்பு
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார்கள். அவர்கள் அருளாலே அவர்கள் தாள் வணங்கி என ஆரம்பிக்கின்றேன். இன்றிருக்கும் என்னை உருவாக்கிய ஃபாத்திமா அன்னை, சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா, ராஜலெக்ஷ்மி மேடம், ஃபாத்திமா கல்லூரியின் மதர், சிஸ்டர்ஸ் என்னுடைய ஆசிரியை அனைவரின் தாள்களையும் பணிந்து ஆரம்பிக்கின்றேன்.
தமிழ்த்துறை ஆசிரியை அனைவருக்கும் லதா மேடம், மற்றும் மாணாக்கியருக்கும் மாலை வந்தனங்கள். அம்பை முதலானோர் பேசிய அவையில் என் தாயின் சபையில் சுசீலாம்மா & ஃபாத்திமா அம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்ட் சொற்பொழிவில் பேசக் கிடைத்த வாய்ப்புஎன் வாழ்நாள் அற்புதம்.