எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நாவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஆகஸ்ட், 2023

அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சோகி சிவா நாவலில் என்னுரை. :-



சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

என்னுரை:- வெக்கையும் கரம்பையும் நிரம்பிய செட்டிநாட்டு மண்ணில் செம்புறாங்கற்களின் மேல் கம்பீரமாய் நிற்பவை வலசை வந்த நகரத்தார்களின் இல்லங்கள். அங்கே இந்த நூற்றாண்டு வரை கொண்டு விக்கச் சென்ற கணவர்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் ஆச்சிகள் ஏராளம். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 72 ஊர்களில் வாழ்ந்து வரும் ஆச்சிகள், ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களில் அனைவரிலும் நாம் வாழ்வரசிகளையே அநேகம் காவிய நாயகிகளாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் கோட்டை வீடுகளில் கணவனைப் பிரிந்த  வெள்ளைச்சீலைக்கார ஆச்சிகளின் தனிமைத் துயர் அவர்களால் மட்டுமல்ல. வேறு எவர்களாலும் வரைந்து காட்டப்படவே இல்லை, இன்றுவரை. 

வெள்ளி, 13 நவம்பர், 2020

தடங்கள் – ஒரு பார்வை

 தடங்கள்ஒரு பார்வை

தடங்கள் 

நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ளச் செய்கிறது தடங்கள். சுசீலாம்மாவின் கல்லூரிப் பருவ, பேராசிரியக் காலங்களில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகள் அழகான மொழியில் எழுத்தாக்கம் பெற்றுள்ளன.

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் சில இடங்களில் பெண்களே பிரச்சனைகள். நந்தா, சிந்து என்ற இருவரின் கடித உரையாடலாகத் தொடர்கிறது புதினம். அநேகம் சிந்து நந்தாவுக்கு எழுதும் அறிவுசார் மின்னஞ்சல்கள். இது புதினத்தில் புதுவகை உத்தி.

Related Posts Plugin for WordPress, Blogger...