சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.
சோகி சிவா நாவலில் என்னுரை. :-
சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.
என்னுரை:- வெக்கையும் கரம்பையும் நிரம்பிய செட்டிநாட்டு மண்ணில் செம்புறாங்கற்களின் மேல் கம்பீரமாய் நிற்பவை வலசை வந்த நகரத்தார்களின் இல்லங்கள். அங்கே இந்த நூற்றாண்டு வரை கொண்டு விக்கச் சென்ற கணவர்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் ஆச்சிகள் ஏராளம். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 72 ஊர்களில் வாழ்ந்து வரும் ஆச்சிகள், ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களில் அனைவரிலும் நாம் வாழ்வரசிகளையே அநேகம் காவிய நாயகிகளாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் கோட்டை வீடுகளில் கணவனைப் பிரிந்த வெள்ளைச்சீலைக்கார ஆச் சிகளின் தனிமைத் துயர் அவர்களால் மட்டுமல்ல. வேறு எவர்களாலும் வரைந்து காட்டப்படவே இல்லை, இன்றுவரை.

