எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சிறுவர் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் இலக்கியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.



சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்

இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்கள் சிறார்களுக்குப்புத்திக் கூர்மை கொடுக்கும் நூல்கள். 


பஞ்ச தந்திரக் கதைகள்

 பள்ளி ஆசிரியர்கள் எழுதும் சிறுவர் நூல்கள் சிறப்பானவையாக அமைகின்றன. ருக்மணி சேசஷாயி அம்மா அவர்கள் கூட ஒரு ஆசிரியைதான். அல்லும் பகலும் சிறுவர்களின் இயல்புகளையும் அவர்களின் குடும்ப பொருளாதார கஷ்டங்களையும் பக்கம் இருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் அவர்கள் எழுதும் சிறார் கதைகளும் சிறப்பானவையாகவே இருக்கும்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.


சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்

பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள்

அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை தனது சாதுர்யப் போக்கால் நாசுக்காகச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் துயருக்கு இரங்கி, மாபெரும் சக்கரவர்த்தியும் உணர்ந்து செயல்படும் வண்ணம் அமைந்தவை பீர்பால் கதைகள்.

அக்பர் பாதுஷா, அவரின் அமைச்சர் பீர்பால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. மகேஷ்தாஸ் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றிய கதைகள் எல்லாம் சிரிப்பூட்டும் சிந்தனைக் கதைகள். இதை மொழி பெயர்த்தவர் திரு. ஏ. எஸ். வழித்துணை ராமன்.

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1



சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1

வா மணிகண்டன் சொன்னது போல சினிமாவாகவோ, வீடியோவாகவோ, தொலைக்காட்சி கார்ட்டூனாகவோ பார்க்கும்போது ஏற்படும் சிந்தனையற்ற மொந்தைத்தனத்தைவிட அவற்றையே புத்தகங்களில் படிக்கும்போது மனக்கண்னில் தோன்றும் சித்திரங்கள் உருவாக்கும் அதிசய உலகம் அற்புதமானது. புத்தக வாசிப்பு கற்பனா சக்தியை மேம்படுத்தும். கிரியேட்டிவிட்டியையும் தூண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...