எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அரிச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 மார்ச், 2018

வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :- தினமலர் சிறுவர்மலர் - 11.


வாய்மையின் மைந்தன் லோகிதாசன் :-


சீரும் சிறப்புமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது வாரணாசி. காசி என்னும் இப்பதியில் விசுவநாதரும் விசாலாட்சியும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நானோ நாகத்தால் தீண்டப்பட்டுக் கங்கைக் கரையின் ஓரத்தில் கிடக்கிறேன்.  ஆனால் என் தாயோ காசிராஜன் குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு என் தந்தையாலேயே வெட்டுப்படப் போகிறாள்.

இதெல்லாம் எதனால் என நினைக்கிறீர்கள்.? வாய்மையே என்றும் வெல்லும் என்று என் தந்தை கொண்ட விடாப்பிடியான கொள்கையால்தான். மனைவியானால் என்ன மகனானால் என்ன சத்யமேவ ஜெயதே என்று கடமையில் கண்ணாய் இருக்கிறார் என் தந்தை.
  
மனைவியும் மகனும் இறப்பின் நுனியில் இருக்கும்போதும் தன் வாய்மையை விடாத அந்த மயானக் காவலர் யார் ? அவர் தான் என் தந்தை அரிச்சந்திர மகாராஜா. இந்தத் தாரணியே போற்றும் அயோத்தியின் பேரரசர். விண்ணுலகத்திலும் மண்ணுலகத்திலும் எக்காலத்திலும் வாய்மைக்காகப் போற்றப்படக் கூடிய மன வலிமை வாய்ந்தவர் என வசிஷ்டரால் புகழப்பட்டவர். ! அதனாலேயே விசுவாமித்திர மகரிஷியின் அழுக்காறுக்கும் அளவற்ற சோதனைக்கும் ஆளானவர்.

வாருங்கள் காசி மாநகரம் அழைத்துச் செல்கிறேன். எங்கள் கதையைப் பார்த்து வாய்மையைக் கடைப்பிடிப்பது குறித்து முடிவெடுங்கள்.

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1



சிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1

வா மணிகண்டன் சொன்னது போல சினிமாவாகவோ, வீடியோவாகவோ, தொலைக்காட்சி கார்ட்டூனாகவோ பார்க்கும்போது ஏற்படும் சிந்தனையற்ற மொந்தைத்தனத்தைவிட அவற்றையே புத்தகங்களில் படிக்கும்போது மனக்கண்னில் தோன்றும் சித்திரங்கள் உருவாக்கும் அதிசய உலகம் அற்புதமானது. புத்தக வாசிப்பு கற்பனா சக்தியை மேம்படுத்தும். கிரியேட்டிவிட்டியையும் தூண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...