ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்
”தனியே தன்னந்தனியே
நான் காத்துக் காத்து நின்றேன்” என்று ஒரு பாடல் ரிதம் படத்தில் வரும். அந்தப் படத்தில்
மீனா ஒரு சோலோ பேரண்டாக ஒரு குழந்தையை வளர்த்து வருவார். அதுவும் அவர் பெற்ற குழந்தை
அல்ல. தத்து எடுத்து வளர்க்கும் குழந்தை என்பது க்ளைமேக்ஸில்தான் தெரியவரும்.
பொதுவாக சிங்கிள்
பேரண்ட், சோலோ பேரண்ட் என்கின்ற வார்த்தைகள் தனித்துக் குழந்தைகளை வளர்த்து வரும் ஒற்றைப்
பெற்றோரான தந்தையுமான தாயைக் குறிப்பதாகத் தோன்றினாலும் இக்காலத்தில் அது தாயுமான தந்தையையும்
சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக நடிகர் இயக்குநர் பார்த்திபன் தன் குழந்தைகளைத் தனியாளாக
வளர்த்துத் திருமணம் செய்துவைத்த நிகழ்வைச் சொல்லலாம்.
ஓரிரு குழந்தைகளோடு தனித்து வாழும் விதவை, மனைவியை இழந்தவர், விவாகரத்துப் பெற்றவர், திருமணம் செய்துகொள்ளாமல் முன்னர் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தவர்கள் மட்டுமல்ல, திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பவரும் ( சுஷ்மிதா சென் போன்ற மாடல் மங்கையர்) இந்த ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் அடங்குவர்.
