எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இராஜேஸ்வரி ஜெகமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராஜேஸ்வரி ஜெகமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். இராஜேஸ்வரி ஜெகமணியும் ஜெகத்ரட்சகர்களும்.

இராஜேஸ்வரி ஜெகமணி. முதலிடம் பெற்ற வலைப்பதிவர். எனக்குத் தெரிந்து சித்ரா சாலமனுக்குப் பிறகு பின்னூட்டமிடுவதில் அதிக வலைப்பதிவுகளில் முதலிடம் பெற்றிருப்பார். பின்னூட்டமே இப்படி என்றால் இடுகைகள் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ. கிட்டத்தட்ட 1500 இடுகைகளும், 7 லட்சம் பார்வைகளும் கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது இவருடைய மணிராஜ் வலைப்பூ. இதில் என்ன சிறப்பு என்றால் இவர் இதில் பதிந்திருப்பது அனைத்தும் கோயில்களும் ஆன்மீகமும் பற்றியே. தமிழ் இந்துவில் போனவாரம் இவரது 4 கட்டுரைகள் வந்துள்ளன. இது போல லேடீஸ் ஸ்பெஷல் போக இன்னும் பல பத்ரிக்கைகளிலும் இவரது பங்களிப்பைப் பார்க்கலாம். மிகச் சிறப்பான இடுகைகளுடன் அது சம்பந்தப்பட்ட  படங்களும் அதிகம்  இடம் பெற்றிருக்கும் .வலைச்சரத்திலோ வேறு எங்குமோ நம்முடைய பதிவு அல்லது அதற்கான இணைப்பைப் பார்த்தால் உடனே வந்து இவரும் திண்டுக்கல் தனபாலன் சகோவும் தெரிவிப்பார்கள். நம்மைப் பற்றி அக்கறை கொண்டவர்களைப் பார்த்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்தானே. . 

மிகப் பெரும் வலைப்பதிவரான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .

யாவரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்பதற்கிணங்க செயல்படும் இவரிடம் இவருக்கு ஈடுபாடு உள்ள ஆன்மீகம் பற்றி ஒரு கேள்வி கேட்டேன் .


////  எத்தனையோ கோயில்களுக்குப்போயிருப்போம். அத்தனையும் இப்படி ஞாபகம் வைத்து எப்படி எழுத முடிகிறது.உங்களை ஆன்மீகத்தின் பக்கம் இழுத்தது எது.உங்களுக்கு மிகப் பிடித்த ஆன்மீகத் தலம் எது . ?///


இராஜேஸ்வரி ஜெகமணி :-

நலம் நலமே மலர்க. மிகப் பெரும் வலைப்பதிவரான தேன்போல் இனிமையான தாங்கள் என் வளர்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி .

சமுத்திரம் பெரிதா தேன்துளி பெரிதா என்றால் 
தேன் துளியே வெற்றிபெறும்..!


Related Posts Plugin for WordPress, Blogger...