எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அகஸ்தியர் கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகஸ்தியர் கூடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 நவம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். பத்மஸ்ரீ விஜயகுமாரும் அகஸ்தியர் கூடமும்.

என் முகநூல் சகோதரர் பத்மஸ்ரீ விஜயகுமார். பத்மஸ்ரீ என்பது அவரின் கடைப் பெயர். ( பேரோடு சேர்ந்து ஒலிக்கும்போது விருதுப் பெயர்போல் இருக்கிறதே  என்று நினைத்தேன்) . எனவே மனைவியோ, தாயோ என்ற குழப்பம் வேண்டாம். :)

இவர் சென்ற இதழ் சக்தி விகடனில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தில் இடம் பெற்றிருந்தார். ஆச்சர்யமாக இருந்தது. சின்ன வயதிலேயே ஆன்மீகத் தேடல் அதிகம் உள்ள சகோதரர்.

{இங்கே ஹைதையில் பௌர்ணமி அன்று சத்குரு கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு நான் சென்று வரவேண்டும் என்று கூறி விபரங்கள் அனுப்பினார். ஆனால் என்னால் சென்று வர இயலாத அளவு வீட்டிலும் விசேஷங்கள். :) திடீரென்று லீவ் கிடைத்து கணவர் , குழந்தைகள் எல்லாரும் ஒண்ணா இருந்தாலே விசேஷம்தானே :) }

விஜய் கோவையை இருப்பிடமாகக் கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியர். இளம் வயதுதான் என்றாலும் ராம்சுரத் குமார், சத்குரு ஜக்கிவாசுதேவ், அகத்தியர் படங்களைத் தன் முகப்புப்படமாக வைத்திருப்பார்.

மலை சார்ந்த புகைப்படங்கள் அடிக்கடி இடம் பெறவே அவரிடம் மெசேஜ் செய்து கேட்டதில் மலைப்பயணங்களில் (அதுவும் மனிதர்கள் அதிகம் பயணித்திராத மலைப் ப்ரதேசங்களுக்குச் செல்வதில் ) அதி விருப்பம் எனச் சொன்னார். அவர் பயணித்த ஒரு மலைப் பயணத்தைப் பற்றிக் கேட்டவுடன் குறுமுனி அகத்தியர் உறைந்திருக்கும் பொதிகை மலை பற்றியும் அங்கே பயணம் செய்து வந்தது பற்றியும் எழுதி அனுப்பினார்.

///விஜய் நீங்கள் சென்று வந்த ஒரு மலைப்பயணத்தைப் பற்றி சும்மாவின் வாசகர்களுக்குக் கூறுங்கள். ? (என்னென்ன இடையூறுகளைக் கடந்தீர்கள் ? மேலும் மலையேற்றம் செய்ய விரும்புபவர்கள் கைக்கொள்ள வேண்டியது என்ன. ?உங்கள் அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்)  ///

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ....

மேற்கு மலை தொடரில் தமிழக கேரள எல்லை பகுதியில், பல அரிய உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கும் செங்குத்தான மலை மலையின் உச்சியில் வீற்றிருக்கும் அகத்திய மாமுனியை காண பயணமானோம்.. நண்பர்களுடன்.

பல மூலிகைகளை தழுவி வந்து நம்மை வருடி செல்லும் மெல்லிய தென்றல்...