எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எங்கள் ப்ளாகில் பெண் பூக்கள் பற்றிய மதிப்புரை.


பெண் பூக்கள்

 



முள்ளும் மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும் முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.


அதுபோலவே இந்தப் புத்தகத்தின் தலைப்பு.  பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.  பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம்.  பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள் என்று சொல்வது..


தலைப்பை ஆராய்வதை விட்டு விடுவோம்.  புத்தகம் ஒவ்வொரு பூவைப் பற்றியும் ஒரு கவிதை சொல்கிறது.  இது இந்தப் பதிப்பகத்தின் ஆறாவது புத்தகம்.  தேனம்மைக்கு இது நாலாவது புத்தகம் என்கிறது புள்ளிவிவரம்.
பரவசப்பூ, வெட்கப்பூ, காதல் பூ, எமாற்றப்பூ, ஏமாற்றும் பூ என்று என பல்வேறு உணர்வுகளில் கவிதைகள்.



கவிதைகள் எளிமையாய் இருக்க வேண்டுமா?  புரியக் கஷ்டமாய் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா?


சூரியகாந்திக் கவிதையை ஆண் ஏமாற்றுவதை உணராத பெண்ணின் காதல் பற்றிய கவிதை என்று சொல்லலாமோ..


தாழம்பூ - "பூஜைக்கு மறுக்கப்பட்டாலென்ன?"  - தாழம்பூவைப் பூஜையிலும் வைக்கிறோமே என்று தோன்றியது.  எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைகளில் தாழம்பூ உண்டு.  


பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி
சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...


புரியவில்லை!

கவிதை வரிசையில் முல்லைக் கவிதை டாப்.

பூக்களே பேசுவது போல சில கவிதைகள், பூக்களைப் பற்றிப் பேசுவது போல சில கவிதைகள்.


அரளிவிதை -சயனைடு குப்பி - புன்னகைக்க வைத்த, ரசிக்கத்தக்க ஒப்பீடு!  நல்ல உவமை.


விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...
குமரி முனையில்
அம்மன் சூடிக்
கடலில் வீசிய செவ்வரளி
செந்தீயாய்..


சூரியன்!


சில பூக்களின் பெயர்கள் படிக்கும்போது அந்தப் பூக்கள் எப்படி இருக்கும் என்கிற கற்பனையில் மனம் லயித்து விடுகிறது!  மகிழம்பூ, கொடிச் சம்பங்கி.. அந்தந்த பூக்களின் படம் அந்தந்த பக்கங்களில் தந்திருந்தாலும்!  நிறையப் பூக்களை நான் இதுதான் அந்தப்பூ என்று அறிந்து பார்த்ததில்லை!


சப்பாத்திக் கள்ளியின் வழி சொல்லும் சோகம், அதிலேயே தன்னம்பிக்கை - அழகு!


ஆமாம், ஐயங்கார்ப் பெண்களின் மூக்கில் அப்படி என்ன விசேஷம் தேனம்மை?!!


பூசணிப் பூவுடன் விழித்துக் காத்திருக்கும் உழைப்பாளியின் இரவு சுவாரஸ்யம்.


துணையின் மனதறியாத ஆக்கிரமிப்பு அண்மை டேபிள் ரோஸில்!  அதில்,


என் கண் எனும் ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக மாற்றுகிறேன்
என் கண்ணுக்கு விருந்தாய்..
எப்படி உணர்கிறாய் உன்னை நீ..
அறிய விழைந்ததில்லை..  


எப்படி உணர்கிறாய் 'உன்னை' நீ யா?  'என்னை' நீயா?


ஸ்கோர், பல்ஸ் போன்ற ஆங்கில வார்த்தைகளும், ஹிஜரப், ஹாசல்நட் போன்ற அந்நிய வார்த்தைகளும் சில சமயம் கவிதையை சற்றுத் தள்ளி நிறுத்துகின்றன!


அனிச்ச மலருக்கு அடுத்தடுத்து இரண்டு பக்கங்கள்.  உணர்ச்சி வெள்ளம்!
அந்திமந்தாரையில் கல்கியின் பொன்னியின் செல்வப் பாத்திரங்கள்.
எப்படித்தான் எழுதுகிறீர்களோ இப்படி எல்லாம் கவிதை!  படிக்க மட்டுமே தெரிகிறது எனக்கு!


பாராட்டுகள் சகோதரி தேனம்மை.




பெண் பூக்கள்
தேனம்மை லக்ஷ்மணன்
புதிய தரிசனம் பதிப்பகம்,
64 பக்கங்கள் - 60 ரூபாய்.
************************************
இங்கேயும் படிக்கலாம். 
http://engalblog.blogspot.com/2015/11/blog-post_24.html 

மீண்டும் நன்றி எங்கள் ப்லாக் & அன்பு சகோ ஸ்ரீராம். :) 


மிக்க மகிழ்வும் அன்பும் நன்றியும் எங்கள் ப்ளாக். !!! ஆனந்த அதிர்ச்சி கொடுத்திட்டீங்க. மிக நச்சென்ற அழகான விமர்சனத்துக்கு இதயங்கனிந்த நன்றி எங்கள் ப்ளாக் & ஸ்ரீராம் சகோ. :)

6 கருத்துகள்:

  1. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், ஹனி மேடம்.

    அங்கு ‘எங்கள் ப்ளாக்’ பதிவிலும் 24.11.2015 அன்று என்னுடையதே முதல் கமெண்ட்:

    oooooooooo
    வை.கோபாலகிருஷ்ணன் said...
    மிகவும் அருமையான விமர்சனம். பாராட்டுகள். வாழ்த்துகள். முதல் படத்தில், பயணத்தில் உள்ள தேனை, அப்படியே சிந்தாமல் சிதறாமல் எப்படித்தான் பிடித்தீர்களோ ! :) ஆச்சர்யப்பட்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம். ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
    oooooooooo

    பதிலளிநீக்கு
  2. நல்ல நூல் விமர்சனம்... ஸ்ரீராம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
    தங்களுக்கும்தான் அக்கா..

    பதிலளிநீக்கு
  3. அங்கேயும் படித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. அருமையாகச் சொன்னதால் தேனாக இனிக்கிறது. வாழ்த்துகள் தேன் வாழ்த்துகள் ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி.

    வாழ்த்துகளும், பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  6. மிக மிக நன்றி விஜிகே சார். நான் பயணத்தில் இல்லை . இது சாஸ்த்ரி பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தபோது எடுத்தது.

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    தேன் வாழ்த்துக்கு நன்றி வல்லிம்மா

    மிக மிக நன்றி ஸ்ரீராம். !!!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...