ஐந்தாம் அத்யாயம் ஏழாம் ஸ்லோகம்
ஆலஸ்ய உபகதா வித்யா
பரஹஸ்த
கதம் தனம் l
அல்ப பீஜம் ஹதம் க்ஷேத்ரம்
ஹதம் ஸைன்யம் அநாயகம் ll
பொருள்:-
ஆலஸ்ய = சோம்பேறித்தனம், பயன்படுத்தபடாத
உபகதா = வீழ்ந்து போகும், வீழ்ச்சி, வீண்
வித்யா = கல்வியறிவு
பரஹஸ்த = அந்நியரின் கைக்குச் சென்ற
கதம் = அழிந்துபோதல், முடிந்துபோதல்
தனம் = செல்வம்
அல்ப பீஜம் = குறைந்துபோன விதைகள்
ஹதம் = விளைச்சலை நாசமாக்கும்
க்ஷேத்ரம் = நிலத்தை, வயலை
ஹதம் ஸைன்யம் = படை பட்டாளம் சேனை அழிந்து போகும்
அநாயகம் = தளபதி அல்லது நாயகன் ஒருவன் வழி நடத்தாத சேனை
விளக்கம்:- பயன்படுத்தப்படாத கல்வி அறிவு சோம்பேறித்தனத்தால்
வீணாகும். அந்நியரின் கைவசம் சென்ற செல்வம் அழிந்து போகும். குறைந்துபோன விதைகள் பூமியில்
விளைச்சலைப் பாதிக்கும். தளபதி அல்லது நாயகன் ஒருவன் வழி நடத்தாத சேனை படை பட்டாளம்
அழிந்து ஒழிந்து போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)