எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 டிசம்பர், 2011

அட்சரேகை.. தீர்க்கரேகை...

அட்ச ரேகை தீர்க்க ரேகை
******************************
ஊர் ஊராய்
நகரும் வெய்யில்..
எல்லா காலத்திலும்
என்று அஷ்டமி.,
எது பௌர்ணமி...
ஹோரைகளும்
சகட யோகங்களும்
ராகுவாய் கடித்து
கேதுவாய் ஞானமூட்டி
ராஜயோகமும் விபரீதமாய்.

உறைந்துள்ளிருக்கும்
கடலிலிருந்து பெருகி
கூர் பற்களில் உலகமாகவோ
போதனைகள் நிறைந்த
புத்தகமாகவோ ஏந்த
நிர்ணயங்களற்ற
சமூகவெளியில்.
நிலைப்பாடற்ற
பிரதிமைகளுக்கு
நாளானால் என்ன
கோளானால் என்ன..
அட்சரேகை தீர்க்க ரேகையாய்
கற்பனைக் கோடுகள்.

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 27, 2011 திண்ணையில் வெளிவந்தது.

3 கருத்துகள்:

  1. எல்லாமே மனிதனின் கற்பனையால் கருவுற்றதே....!கவிதை நன்று!
    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...