எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 ஜனவரி, 2019

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:- தினமலர் சிறுவர்மலர் - 2.

மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:-
மாபெரும் குற்றம் செய்தவர்கள் ராஜாவின் பிள்ளையானால் தண்டனையிலிருந்து எப்படியோ தப்பி விடுவார்கள். ஆனால் ஒரு ராஜா குற்றம் செய்தவன் தன் மகன் என்று தெரிந்ததும் நீதி கேட்ட ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனை ஈடு கொடுக்கிறார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சோழ நாட்டினைத் திருவாரூரில் இருந்துகொண்டு ஆட்சி செய்து வந்தான் ஒரு மன்னன். நீதி நெறி வழுவாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் மனு நீதிச் சோழன் என்று அழைக்கப்பட்டான்.  அவனது பிரியத்துக்குரிய மகன் பெயர் வீதிவிடங்கன் என்றழைக்கப்படும் பிரியவிருத்தன். மன்னனுக்கு மகன் மேல் அளவிடமுடியாத பாசம் உண்டு.

சனி, 26 ஜனவரி, 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் சொல்லும் நமக்கு நாமே திட்டம்.

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் பெரியவர்கள் அத்யாவசியமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை திரு விவிஎஸ் சார் கூறியுள்ளார். படித்துப் பயனடையுங்கள்.

நமக்கு நாமே திட்டம் !

”ஹலோ ஸார்,  எங்கப்பா எல் ஐ சி-ல போட்டிருக்காரே ஜீவன் அக்‌ஷை பாலிஸி.  அதுக்கு என்ன ரேட் ஆஃப் இண்டரஸ்ட் வருது ஸார் ?”
“12 %”
“பூ, இவ்ளோதானா.  ஸார் பேசாம அத ஃபோர்கிளோஸ் பண்ணி செக் வாங்கி குடுத்துடுங்க.  அத அமவுண்ட்ட என் பிசினஸ்ல போட்டுக்கறேன்.  ஃபிஃப்டீன் பர்சண்ட் எங்கப்பாவுக்குக் கொடுத்துடறேன்”
“ஸார்,  பேங்க் எஃப்டீ மாதிரி அப்படி நெனச்ச ஒடனே கிளோஸ் பண்ண முடியாது.  அவருக்கு ஏதாவது சர்ஜரி மாதிரி மெடிக்கல் நீட் இருக்கணும்.  அப்பத்தான் ஃபோர்கிளோஸ் பண்ண முடியும்.  அதுக்கும் மெடிக்கல் ரிப்போர்ட் காபீஸ் கொடுக்கணும்”

புதன், 23 ஜனவரி, 2019

செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.

2021. ஆங்கிலப் புத்தாண்டுக்கு ஆந்திராவுலயும் கர்நாடகாவுலயும் வங்கிகள் லீவ் இல்ல.
#Desi_Ppl. !

2022. எல்லாரும் பொறுப்பா போஸ்ட் போடும்போது  நாம மட்டும் நாடோடி மாதிரி போஸ்ட் போடுறமே.. ஹாஹா கொஞ்சம் கில்டியாதான் இருக்கு.

2023. இன்னும் துவங்கவே இல்லை
அனைத்தும் சொல்லி முடித்துவிட்டதுபோல் இருக்கிறது.

2024. கூடா காமம் விளக்கும் கதைகள் அதிகம் சிலாகிக்கப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. கரமுண்டார் வீடு, மாதொரு பாகன், அபிதா, மோகமுள்.

2025. அதாண்டா இதாண்டா அலமாண்டா இதாண்டா. :) காலை வணக்கம் மக்காஸ்.

திங்கள், 21 ஜனவரி, 2019

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :-
த்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள்  நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.
Related Posts Plugin for WordPress, Blogger...