எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 7 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - இப்னு ஹம்துனின் கடவுள் தேடலும் வாழ்க்கைப் பயணமும்.


முகநூல் சகோ ஃபக்ருதீன் இப்னு ஹம்துன். நான்கைந்து ஆண்டுகளாகத் தெரியும். நேரில் பார்த்ததில்லை. ஆனால் கல்யாண் நினைவுக்கவிதைப் போட்டியில் - நாங்கள் -  நான் இருமுறை பெற்ற பரிசுப் பணத்தை இந்தியா வந்திருந்தபோது மெயில்முலமாகக் கேட்டு எங்கள் வங்கி அக்கவுண்டில் செலுத்தியவர். 

இவரது வெண்பாம்கள் பிரசித்தம். அதுபோல் இவர் வல்லமை இணையம் வைத்த ஒரு கடிதப் போட்டிக்கு எழுதிப் பரிசும் பெற்றிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்க ஆசாத் ஜி, ஜமாலன், ஷேக் சகோ , கனவுப் பிரியன் போன்ற வளைகுடா வாழ் தமிழர்களில் இவரும் ஒருவர்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஷில்பாராமில் பாரம்பரிய நடனக் காட்சிகள் .

ஹைதை ஷில்பாராமத்தில் ( கலாச்சாரக் கிராமம்)  கோடைத்திருவிழாவின்போது பரதநாட்டியம் போன்ற பாரம்பரியக் கலைகளை வளர்த்தெடுக்கப் போட்டிகள் நிகழ்த்துகிறார்கள்.
 வரவேற்கும் நடனப் பெண் சிலைகள் அற்புதம்.

கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலைநிகழ்ச்சிகள்.

புதுக்கோட்டை கற்பக விநாயகர் கல்வி நிறுவனத்தில் சில கலை அறிவியல் கல்லூரிகளும் , நர்சிங் கல்லூரி ஒன்றும் , ஒரு பாலிடெக்னிக்கும் , ஒரு பள்ளியும் இணைந்து செயல்படுகிறது.

அங்கே மகளிர் தினத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. சிறப்பான உரை என்று ஆசிரியர்கள் சிலர் பாராட்டினார்கள். தீசிஸ் மாதிரி இருக்கிறது என்றும் அதை மாணவிகள் புரிந்துகொண்டு  சிறப்பாகக்  கைக்கொள்ளவேண்டும் என்ற தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

பார்க் கல்லூரி மாணவிகளின் நடனம்.

பார்க் கல்லூரியின் மகளிர் மன்றத்தின் ஆரம்பவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன்.

அதன் பின்னர் அங்கே சாஃப்ட் ஸ்கில் ட்ரெயினர் திரு வீரராகவன்  ஒரு கவிதை  வாசித்தார்.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சாணத்தை இனி போஸ்டர்ல போடாதீங்க கம்போஸ்ட்டா போடுங்க.

சாணத்தை  இனி  போஸ்டர்ல  போடாதீங்க  கம்போஸ்ட்டா  போடுங்க.

சாணத்தை  இனி  சுவரொட்டியில் போடாதீங்க

  ங்காவது பிடிக்காத போஸ்டரைப் பார்த்தா உடனே சாணியை எடுத்து வீசாதீங்க. நீங்க கோபப்பட்டு சாணியை வீசுற அளவுக்குக் கூட அவங்க லாயக்கானவங்க இல்லீங்க . அந்த மதிப்பு மிக்க சாணிய உரக்குழியில் போடுங்க. அவ்வளவும் இயற்கை உரம்க.

  கென்யாவில் இயற்கைத் தொழு உரத்துக்கு மதிப்பு அதிகமாயிருக்கு. ஏன்னா இரசாயன உரம் விலை அதிகம் என்பதோடு நிலத்தையும் நீரையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது. எனவே அவங்க இயற்கை த்தொழு உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்றாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகள்ல வெட்டப்பட்ட குழிகளில் மக்கிய இலை தழைகள், வீட்டின் காய்கறிக் கழிவுகள், கரும்புச்  சக்கைகள், மிருகங்களின் கழிவுகள் முக்கியமா மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி  நான்கைந்து மாதங்களுக்கு மக்கச்செய்றாங்க. அதில் மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் காளான்களும் வளர்ந்து அவற்றை நுண்துகள்களாக உடைக்கின்றன. இதை உரமாப் பயன்படுத்துறாங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...