எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 15 ஜூலை, 2015
திங்கள், 13 ஜூலை, 2015
புதன், 8 ஜூலை, 2015
”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )
”இணைய”ற்ற தெப்பம்..
******************************
******************************
மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.
உறக்கத்தின் வேர்.
இரவின்
கருமை நீர்க்கச் செய்யும்
இருசொட்டுக்
கண்ணீர்த்துளிகள்
உறக்கத்தின்
வேர்பிடிக்குமுன்
கிளைபடர்ந்து
விடுகிறன..
திசைகளற்ற
கனவுகளைத்
துரத்தும்
கண்கள்
கோளங்களாய்
அசைகின்றன.
செவ்வாய், 7 ஜூலை, 2015
தனக்காக.
கரை கடப்பதும்
அணை கடப்பதும்
அவள் நிர்ணயித்ததல்ல
கரையேறவிடாத அழுத்தம்.
துளியாய் முத்தமிடுவதும்
வெள்ளமாய்ப் பொங்குவதும்
அவள் தேர்ந்தெடுப்பதில்லை
சூழ்நிலை மேகம்.
அணை கடப்பதும்
அவள் நிர்ணயித்ததல்ல
கரையேறவிடாத அழுத்தம்.
துளியாய் முத்தமிடுவதும்
வெள்ளமாய்ப் பொங்குவதும்
அவள் தேர்ந்தெடுப்பதில்லை
சூழ்நிலை மேகம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

