எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஜூலை, 2015

புரவியாய் ஒரு ஆளுமை.

நிறத்திலும் புறத்திலும்
நிரம்பும் காற்று
சுவாசத்தைச் சீராக்கி
முன்னெடுக்கச் சொல்கிறது.


தனித்திருக்கிறேன் ஆனாலும்
சேணங்களற்ற பயணம்

திங்கள், 13 ஜூலை, 2015

கன்னட ”ஸகி “ பத்ரிக்கையில் எனது கவிதை. ”நீரின் பயணம்”. ( இருமுறை ) !!!

கன்னட ஸகியில் கவிதை.

டிசம்பர் 1 - 15 இதழ். இந்தப் புத்தகத்தில் கடைசியில் இருப்பதுதான் என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்த சகோ காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் புகைப்படமும் ( மேலே இருப்பவர்  ) வெளியாகி உள்ளது.அதே கவிதை முதலிலும்  சகியில் (மார்ச் 1 - 15 என நினைக்கிறேன். )வெளியாகி உள்ளது.

புதன், 8 ஜூலை, 2015

”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )

”இணைய”ற்ற தெப்பம்..
******************************
 மந்திர உச்சாடனங்களுக்குள்
மிழற்றுகின்றன மாயக் கிளிகள்.
தாழி தப்பிய ஆலிலை வெண்ணைய்
பில்லையில் சுமந்தபடி பயணிக்கிறார் பெருமாள்.
சவ்வுமிட்டாயும் சீனிமிட்டாயும்
சிவப்பாய் சிதறிக்கிடக்கின்றன காடா விளக்கில்.
வாழையை வாளெடுத்து
வெட்டிச் செல்கிறாள் கரகமஹாராணி.

உறக்கத்தின் வேர்.



இரவின் கருமை நீர்க்கச் செய்யும்
இருசொட்டுக் கண்ணீர்த்துளிகள்
உறக்கத்தின் வேர்பிடிக்குமுன்
கிளைபடர்ந்து விடுகிறன..

திசைகளற்ற கனவுகளைத்
துரத்தும் கண்கள்
கோளங்களாய் அசைகின்றன.

செவ்வாய், 7 ஜூலை, 2015

தனக்காக.

கரை கடப்பதும்
அணை கடப்பதும்
அவள் நிர்ணயித்ததல்ல
கரையேறவிடாத அழுத்தம்.

துளியாய் முத்தமிடுவதும்
வெள்ளமாய்ப் பொங்குவதும்
அவள் தேர்ந்தெடுப்பதில்லை
சூழ்நிலை மேகம்.
Related Posts Plugin for WordPress, Blogger...