எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 பிப்ரவரி, 2010

சொல்லிக்கொள்வது

ஒரு பெண்ணின் வாழ்வில் சொல்லிக் கொள்வது
என்பது திருமணத்தில் ஆரம்பமாகிறது.. எங்கள்
வழக்கில் கும்பிட்டுக் கட்டிக் கொள்வது என்பார்கள்.
அதன்பின் சொல்லிக் கொள்வது ..உற்றார் .,
உறவினர் .,நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லிக்
கொண்டு செல்லும் போது புது வாழ்வும்
ஆரம்பமாகி விடும் .. பின்பு முதல்வீடு., மறுவீடு.,
பின்பு சூலுற்ற ஐந்தாம் மாதம் தீர்த்தமாடும் போது
மகப்பேறுக்கு., பிரசுபத்துக்குப்பின் என எப்பவும்
யாரிடமாவது பெண்கள் சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டியிருக்கிறது ...இந்தப் பாத
யாத்திரையின்போதும் அது தன்னையறியாமல்
நிகழ்ந்தது ...பழக்க தோஷமாய் இருக்கலாம்..

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சில்லு... ச்சில்... ஜில்...!!!

சில்லாய்க் கிடந்தேன்
புல் முளைத்து... சிலையாய்..
ரூப்கண்வர் அல்ல...
அக்கினியின் அவிர்ப்பாகமாய்...
அரூபமாய் மாற ...
உனக்கு வேண்டாமென்றால்
எனக்கும் வேண்டாமா..?
வாழ்வும் .,உயிரும் ...விதவை ....

திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஜில்... ச்சில்...சில்லு

எனக்கும் வேண்டும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..

எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ந(டை)ட ராஜா நட

உபவாசமும் பாதயாத்திரையும் ஒருவரின் ஆன்மீகப்
பாதையில் மட்டுமல்ல.. இகலோக வாழ்வுக்கும்
உகந்தது..

முதல்முறை பாதயாத்திரை செல்பவர்களுக்கு
சில அறிவுரைகள்
*வீட்டைவிட்டு வெளியில் கால்வைத்தால் காரில்.,
வண்டியில் அல்லது ஆட்டோவில் தான்
கால்வைப்பேன் என்பவர்கள்...
*வீட்டுக்குள்ளே கூட ஹவாய்., பாத்ரூமுக்கு
ஒரு ஹவாய்., தோட்டத்துக்கு ஒரு செருப்பு .,
ட்ரெட்மில்லுக்கு ஷூ., பார்ட்டிக்கு கோலாப்புரி.,
கட்ஷூ .,ஸ்லிப் இன் என்று ஏழு செருப்பு
வைத்து இருப்பவர்கள்...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

சுயமும் சுயம் போன்ற ஒன்றும்

இறுக்கச்சாத்திய கதவிற்குள்ளும்
முழுக்க முளைத்த தூசி
அப்பிக் கிடக்க...
துடைக்கத் துடைக்க அழுக்கு..
செந்தாமரையோ., வெண்டாமரையோ.,
கதவின் மரைக்குள்ளும்
மரை கழலும் நிலையில்...
ஹிஸ்டீரியாவா .,ஃபிட்ஸா .,
செலக்டிவ் அம்னீஷியாவா .,
அல்ஸீமர் வேண்டும் வெற்றுப் பிடிவாதம்..
Related Posts Plugin for WordPress, Blogger...