எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...

சனி, 2 ஜனவரி, 2010

இதுவும் கடந்து போகும்

அறியாத அருணாவுக்கு
முப்பத்தாறு ஆண்டுகள்
நினைவற்று..
உலகெங்கும் உழைக்கும்
நண்பருக்கு அயர்ந்து அமர
ஒரு வீடும் குடும்பமும்...
கார்கிலிலும் வாகாவிலும்
கடுங்குளிரில் நமக்காய்
துப்பாக்கிக் கனவான்கள்..
குரலும் பிம்பமும் கொண்டு
சேர்க்கும் வீடு ..
வான்வழிப் பயணமோ ..
வயர் வழிப் பயணமோ..
எத்தனை புத்தாண்டு..
பொங்கல் .,தீபாவளி .,
ரம்ஜான் .,கிறிஸ்துமஸ் .,
யாருமில்லாமல்.. ..
குரல் வழிக்குடித்தனத்தில்
கழிந்து போனது
புத்தாண்டுகளும் புன்னகையும்...

வியாழன், 31 டிசம்பர், 2009

தொடர்கிறது

ஒரு சுண்டல் காகிதமோ .,
வறுகடலைப்பொட்டலமோ.,
பஜ்ஜி தோய்ந்த பேப்பரோ .,
எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
எழுத்துக்களில் காதல் உனக்கு...
ஏழேழு பிறப்பிலும்..
நீ அதை தொடர்கிறாயா ..
அது உன்னைத்தொடர்கிறதா ..
தெரியவில்லை.. !!
பெட்டிக்கடையிலிருந்து .,
ஹிக்கின் பாதாம்ஸ் .,
லேண்ட்மார்க் .,பபாஸி வரை
எங்கெங்கும் நீ அதன் பின்னால்... !!
கருக்கலிலும் அந்தி இருட்டிலும்...
பின்னிரவிலும் மெழுகுவர்த்தி
தலை சுட்ட போதும் ...!!
அமேசானின் ஸாப்போவிலும்...
கின்டிலிலும்., கணினியின் கணப்பிலும்.,
செல்போனிலும் கூட
இடையறாது நேசிக்கிறாய் நீ...!!
படுக்கையறையிலும்.,
பாத்ரூமிலும்.,
ஏன் அலுவலகத்தில் கூட ....!!

புதன், 30 டிசம்பர், 2009

சூரியன் மகள்

யார் விதைத்தும்
பயிராய் முளைத்து...
யார் உடைத்தும்
கனியாய்க்கனிந்து...
யார் தோண்டியும்
வெள்ளமாய்ப்பொங்கி...
யார் மரித்தும்
எனக்குள் ஏந்தி....

என்னைத்துண்டாக்கி
எல்லைக்கோடிட்டு...
தனக்குள்ளே சண்டையிட்டு...
என் மேலே ரத்தம் சிந்தி...
உன் குருக்ஷேத்ரம் தாங்காமல்
நான் பாலையாகவும்
பாளமாகவும் வெடித்து
நேசமுற்றி விளைந்தே
காயப்பட்டு...

திங்கள், 28 டிசம்பர், 2009

ஒப்பனை

அதிகம் ஜரிகை அடைத்த
பட்டுக்களுடனும் நகைகளுடனும்
வலம் வரும் நான்...
ஒரு போதும் முயன்றதில்லை
முகம் மறைக்கும் ஒப்பனைக்கு...
தலைவாரி பூச்சூடி வகிட்டிலும்
நெற்றியிலும் பொட்டிடுவதுடன்
முடிந்துவிடும் என் அலங்காரம்...
Related Posts Plugin for WordPress, Blogger...