எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 டிசம்பர், 2009

மணிமேகலையின் தாய்

உன் துணையைவிட்டு என்னிடம் வந்து
நீ கண்ணகியல்ல என்கிறாய் ..
ஆம்.. நான் கண்ணகியல்ல மாதவி ..

கோயில்களில் பொட்டுக்கட்டி
தேவர் அடியவராய் நடனமாடி
இறைமைக்கே வாக்கப்பட்டேன்
மனிதருக்கு அல்ல...

சனி, 19 டிசம்பர், 2009

படிக்கட்டு

பெருநகரின் தெருக்களில்
பெருநோயாளியாகவோ
பிச்சைக்காரனாகவோ இருக்கலாம்....

பிரபலமாய் இருந்ததின்
சில சந்தோஷத்திற்கும்
பல சங்கடத்திற்கும்...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

என்கவுண்டர்

ரொம்ப நாளாச்சு நான் இப்படிக் குமுறிக் குமுறி
அழுது... என்கவுண்டர்ல எசகுபெசகா சுடப்பட்ட
மாதிரி போனில ரங்கமணிக்கிட்ட என் நியோ
கவுண்டரைக் காணலைன்னு சொல்லி ரெண்டு
துண்டு நனையிற அளவு அழுகாச்சி ...

எப்போ பிளாக் ஆரம்பிச்சனோ அப்போவிலேர்ந்து
இதே ரோதனையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டே
அவர் கேட்டார் சினிமா பார்த்து அழுற பழக்கத்தை
நீ இன்னும் விடலயான்னு ஏதோசின்னக்கவுண்டரப்
பார்த்து நான் அழுகிறேனு நினைச்சுகிட்டு....

புதன், 16 டிசம்பர், 2009

கவிதைகளின் கடவுள்

சொர்க்கத்தின் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்து
சாதாரணனாய்...

கவிதைகளின் கடவுள்
கதைக்க விரும்பினார்
என்னுடன்...

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலைத்தளத்தின் காதலி

வெகுஜனப் பத்திரிக்கையில்
தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த
என் பச்சைக்கிளி எதேச்சையாக
பல தானியங்கள் பரத்தியிருந்த
வலையைப் பார்த்தது...

என்று சென்று அமர்ந்ததோ
அன்றிலிருந்து மீளமுடியாமல்
அசையாமல் அதுவும்
அன்றிலாய் நானும்....
Related Posts Plugin for WordPress, Blogger...