கல்கியின் ஐந்து
நாவல்கள் ( வால்யூம் 2 ) – ஒரு பார்வை.
கல்கியின் நாவல்களைப் பற்றி எழுதுவது திருவண்ணாமலை தீபத்தைப் பற்றி வர்ணனை செய்வதுபோல. அனைவரின் காட்சிக்கும் புலனாகும் ஒன்றை நான் எப்படி தரிசித்தேன் எனப் புளகமுறக் கூறவே எழுதி உள்ளேன். J
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் பார்த்திபன் கனவு ஆகியவற்றின் ரசிகை நான். அதே போல் முன்பே அலை ஓசை, தியாகபூமி, கள்வனின் காதலி, பொய்மான் கரடு, மோகினித் தீவு படித்திருந்தாலும் திரும்ப ஒரு முறை இப்போதும் ரசித்துப் படித்தேன். படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.
