2861. இந்தப் பெரும் மௌனத்தை அவள்தான் உடைக்க வேண்டி இருந்தது. முன்னைப் போல எதுவும் மாறிவிடவில்லையென்றாலும் அந்தச் சோம்பலை, முயற்சியி்ன்மையைச் சாடிக் கொண்டிருந்தாள் அவள். நீரோடிப் பொருக்குத் தட்டிய சுவர் உதிர்ந்தது. தவ்விக் குதித்தோடியது மூலைச்சிலந்தி. முடங்கிக் கிடந்த பூனைகள் வெளிறி வெளியேறின. அடைய இடமில்லாமல் திகைத்தது ஆமை. கிரணக் கீற்றுகளால் அறையைத் துண்டாடிக் கொண்டிருந்தது நிலா. நிம்மதி இன்மையுடன் எங்கிருந்தோ சலம்பிக்கொண்டிருந்தது சாமக்கோழி. புரண்டு புரண்டு உறக்கம் தொலைத்து ஓடிக்கொண்டிருந்தது பக்கத்து வாய்க்கால். சில நாகங்கள், நட்டுவாக்கிளிகள், தேள்கள் நிசப்தமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரியா உலகமொன்றில் லயித்தபடி மூளைப்பாதையில் உறைந்து கிடந்தாள் இவள். வெளிச்சம் துப்பும் பகலின் நினைவு கண்ணைக் கூசச் செய்கிறது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது. மாய உறக்கம் விழிப்புடன் இருக்கிறது. எழுந்திருக்கத்தான் வேண்டும் இன்னும் பிரகாசமாய், பெருநெருப்பாய். !
2862.ரிக்வெஸ்ட் கொடுக்குற அன்புத்தோழமைகளுக்கு ஒரு அறிவிப்பு.
கதை, கவிதை, கட்டுரைகளோடு கோலம், சமையல் ஃபோட்டோக்கள் எல்லாம் பகிர்வேன்.
அப்புறம் வந்துட்டமேன்னு நொந்து நூடுல்ஸாகக் கூடாது.
பாருங்க இப்பக்கூட நான் ஒரு FOODIE ன்னு நிரூபிக்கிறேன். 😉 )
அப்புறம் உங்க அதிர்ஷ்டம் 😂😂🤣🤣🤣🤣🤣🤣
2863.நடைவண்டி
2864.இது என்ன & எங்கே இருக்குன்னு சொல்லுங்க.
