எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
170 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
170 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 20 ஜூன், 2014

தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலயமணியும்.

161. பூங்காற்று திரும்புமா.
மனசை வருடும் பாட்டு. பாராட்ட , மடியில் வச்சு தாலாட்ட ஒரு தாய் மடி கேட்டு ஏங்கும் பாடல். ராதாவும் சிவாஜியும் பாடும் பாடல். முதல் மரியாதை படம். அன்பையும் காதலையும் தேடித் தேடி அலையும் வரிகள். 

162. ஆயர்பாடி மாளிகையில்
கண்ணதாசன் வரிகளில் கண்ணன் துயிலும் காட்சி விரிவது அழகு. என் ஆயா ஒரு முறை பட்டாலையில் என் ஐயா திண்டில் சாய்ந்து தூங்குவதைப் பற்றி இந்தப்  பாடலோடு குறிப்பிட்டார்கள். நினைக்கும்போதெல்லாம் திகைப்பாய் இருக்கும் கணவரைப் பற்றிப் பரிவோடு குறிப்பிடும் அளவு எவ்வளவு அன்பும் காதலும் இருந்திருக்க வேண்டும்.

163. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கல்லூரியில் ஃபோ(ல்)க் டான்ஸ் போட்டியில் ஆடியது மறக்க முடியுமா. டென்த் ப்ளஸ்டூ படிக்கும்போதே பக்கத்துவிட்டு பாமாக்கா மார்கழியில் பாவை நோன்பு இருப்பார்கள். என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். புகைப்படத்தில் இருக்கும் கிருஷ்ணரை நடுவில் வைத்து சுற்றிச் சுற்றி வருவோம். அதன் பின் கல்லூரியில் இந்தப் பாடலையும் மயங்கி மயங்கிப் பாடி ஆடி இருக்கிறோம். ஒவ்வொரு வரியும் மறக்காது . கண்ணன் மேல் அவ்வளவு காதல். :) // குளத்தில் மூழ்கி குளிக்கையில் கோவிந்தன் பெயரைச் சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி. சேலை திருத்தும் போது சீரங்கன் பேரைச் சொன்னால் அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி.

Related Posts Plugin for WordPress, Blogger...