நதிகள் சொல்லித்தந்த பாடம்.
யார் உயர்ந்தவர்?
யார் உயர்ந்தவர்?
மனிதர்களுக்குள்ளே
யார் உயர்ந்தவர் என்ற போட்டி பொறாமை ஏற்படுவதுண்டு. ஆனால் ஒருமுறை நதிகளுக்குள்ளே யார்
உயர்ந்தவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதை யாரிடம் சொல்லித் தீர்வு காணலாம் என யோசித்தன.
அந்த நேரம் பார்த்து திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் ஒரு புஷ்கரமேளா நடைபெறவிருந்தது.
அனைத்து நதிகளும் அத்திருக்கழுக்குன்றத்தில் கோயில் கொண்டிருக்கும்
வேதபுரீஸ்வரரிடம் சென்று யார் உயர்ந்தவர் என்பதைக் கேட்கலாம் என முடிவு செய்தன. வாருங்கள்
குழந்தைகளே நாமும் சென்று யார் உயர்ந்தவர் என்று வேதபுரீஸ்வரர் கூறினார் எனப் பார்ப்போம்.
