சக்திக்குச் சக்தி தந்து சிலையானவர்கள்
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இங்கோ சில அசுரர்கள் பெண்ணால் தங்களை வெல்ல முடியாது எனக் கிள்ளுக்கீரையாக நினைத்தார்கள். அந்த ஐந்து அசுரர்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. அவர்களை வெற்றி கொண்ட பெண்ணும் சாமானியமானவள் அல்ல. ஆனால் அவள் மேலும் மேலும் சக்தி பெற மும்மூர்த்திகளில் இருந்து இந்தப் பூமியின் ஓரறிவு உயிரினம் வரை தங்கள் சக்தியைத் தந்து சிலையாக நின்றார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
முன்பொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அசுர சகோதரர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் இவர்களிடம் சண்டன், முண்டன், ரக்தபீஜன் ஆகியோர் படைத்தளபதிகளாகப் பணியாற்றி வந்தார்கள்.
