கருணை விழிகள்
– ஒருபார்வை
இராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். கிட்டத்தட்ட
100 நூல்களுக்கு மேல் இருக்கும். இவருடைய சரளமான மொழிபெயர்ப்பினால் அவை நமக்கு மொழிபெயர்ப்பு என்றே தெரியாதவண்ணம் நம் தமிழ் மண்ணின் கதைகள் போல் இருக்கும். பெயர்களையும் உணவு, இடங்களையும் வைத்துத்தான் நாம் அவற்றை பக்கத்து மாநிலங்கள் என்று உணரமுடியும்.
