துணையெழுத்து.
துணையெழுத்து
ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவும் பிடித்த சொல்லாடல் ‘வேலையற்றவனின் பகல்பொழுது’ இத்தனைக்கும் இதைப்படிக்கும்போது அவனுக்கு 11, 12 வயதுதான் இருக்கும். ஆனால் இத்தொடரில் இல்லாத சைக்கிள் பற்றிய பார்வை ராமகிருஷ்ணனின் எண்ணப்போக்கில் இருந்து வேறாக இருந்தது.
