சில வருடங்களுக்கு முன் இராமேஸ்வரம் சென்றிருந்தோம். அப்போது அப்துல்கலாம் அவர்களின் நினைவகம் உருவாகி இருந்தது. ஆனாலும் கூட்டம் அதிகம் என்பதால் உள்ளே சென்று பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எனவே வெளியே ஒரு க்ளிக்.
1960 களில் புயலால் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கடல் கொண்ட தனுஷ்கோடியின் மிச்ச சொச்சத்தை அரிச்சல் முனை வரை சென்று பார்த்துவிட்டு வந்தோம். காரில் செல்லும்போது இடப்புறம் முழுவதும் மணலும் மணல் கலந்து ஆங்காங்கே சிறிது உப்புவிளைந்த நீரும். ஆனால் வலப்பக்கம் கொந்தளிக்கு கடல். ஆக்ரோஷிக்கும் அலைகள் என மிரட்சியாக இருந்தது.
அரிச்சல் முனை வரை சென்றோம். பின் தனுஷ்கோடி சிவன் கோவிலையும் ,கோதண்டராமர் கோயிலையும் தரிசித்துவிட்டுத் திரும்பினோம்.
