வையாசி 19 – ஒரு
பார்வை.
வையாசி 19
கரிசல் மண்ணின் கதைகளைப் போல வண்டல் மண்ணின் கதைகளைப்போல சரளையும் கரளையும் நிரம்பிய செம்மண் பூமியான செட்டிநாட்டுப் பகுதியின் கதை இது. ஒரு நூற்றாண்டுக்கான செட்டிநாட்டு வாழ்வியல் ஆவணம் என்றும் சொல்லலாம். ஏ கே செட்டியார் பயணக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்கள். அரு ராமனாதன் வீரபாண்டியன் மனைவி என்ற சரித்திரப் புதினம் எழுதி இருக்கிறார்கள். தமிழண்ணல் போன்றோர் சில கதைகள் எழுதி இருக்கிறார்கள். ஆனால் இப்பகுதி பற்றிய முழுமையான வாழ்வியல் நாவல் ஒன்றை இன்பாவைத் தவிர யாரும் எழுதி இருக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை. இருந்தால் குறிப்பிடுங்கள்.
