எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர் தினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். - பெருமித ஆசிரியர்.



பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். :-

திருப்பூர் பார்க் கல்லூரிக்கு மகளிர் மன்ற விழாவுக்குப் போனபோது அங்கே திருமாறன் ஜெயராமன் சார் , ரெங்கராஜன் சார் ஆகியோரோடு எஸ் வீரராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

மிக ஆச்சர்யத்துக்கு உரிய மனிதர். சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினராக இருக்கிறார். மாணவிகளைத் தன் பெண் குழந்தைகளை போல அன்பு செலுத்துகிறவர்.. ஆங்கிலத்தில் பேசப் பயிற்சிகள் அளிக்கிறார். 

நான் பேசி முடித்ததும் நடனங்கள் ஆரம்பித்தது. அங்கே இருந்த திருமாறன் ஜெயமாறன் சார் “நான் இருந்தால் அவர்கள் கூச்சப்படுவார்கள். இது மகளிர் மன்றம். எனவே அவர்களுக்கான தினம். மகிழ்வாய்க் கொண்டாடட்டும் ” எனச் சொல்லிப் புன்முறுவலோடு விடை பெற்றார்.

அப்போது ஒரு பெண் குழந்தை அற்புதமாக நடனமாடினாள். அருகே அமர்ந்திருந்த வீரராகவன் சார் வியப்போடு பார்த்து ”இந்தப் பெண் எப்படி அற்புதமாக நடனமாடுகிறாள். ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் பேசக் கூப்பிட்டால் பேசவே மாட்டேன்” என்கிறாள்.

வியாழன், 14 மார்ச், 2013

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில்

ஆசிரியர் தினத்தில் பல்லாவரம் எஸ் ஆர் வி வியில் :-

முகநூல் நண்பர் சதீஷ் பல்லாவரம் லயன்ஸ் க்ளப்பில் செயலாளராக இருக்கிறார். முகநூலில் என்னுடைய இலக்கியப் பங்களிப்பைப் பார்த்துவிட்டு ஆசிரியர் தினத்தன்று  உரையாற்ற அழைத்திருந்தார்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சரஸ்வதி வணக்கம்

பேரன்பிற்கினியவளே....
பெருமதிப்பிற்குரியவளே...
கனிவான சரஸ்வதியே...

ஆசிரியப்பெருந்தகையே...
என் இனிய சுசீலாம்மா....!!!
கம்பீரக் குரலழகி... !!!
உலகமெல்லாம் உன்
வீணை ஒலி...!!!

தலை நகரில் உறைந்துள்ள
எங்கள் தலைவியே...
ஏடும் எழுத்தாணியும் கொண்டு
இன்னும் நீயே எழுதுகின்றாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...