எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

191. இது நிலைக்கதவில் உள்ள அமைப்பு. கைப்பிடி பாருங்கள். கோயில் கதவு போலக் கதவும் முரட்டுக் கைப்பிடியும். வார்ப்பிரும்பா பித்தளையா தெரியவில்லை. ஆனா  பாலிஷ் செய்தா மஞ்சள் கலரில் தங்க வண்ணத்தில் ( பெயிண்ட் :) ஜொலிக்கும். அதில் கோட்டைகளில் இருப்பது போன்ற கெட்டி குமிழ்கள். இது போன்ற அமைப்பை கோல்கொண்டா போன்ற கோட்டைகளில் கோட்டைக் கதவுகளில் பார்த்திருக்கிறேன். யானை வந்து முட்டினால் காயம் படும். அதுக்காக அங்கே அமைக்கப்பட்டிருக்கும். இங்கே வீடுகள் கோட்டை போல இருப்பதால் இம்மாதிரி அமைத்திருக்கலாம். ஆனால் இது முகப்பின் உள்ளே உள்ள நிலைக்கதவு. பட்டாலைக்குச் செல்லும் நிலைவாயில்.
இது வலது பக்க கொண்டி. சாவியின் துவாரமும் பெரிதாக இருக்கு. சாவிகள் எல்லாம் 192. கோயில் சாவிகள் போல இரண்டு கைகளாலும் பிடித்துத் திறக்கணும். ஊருக்கு வந்துட்டுப் போனா ரெண்டு நாளைக்கு நடு விரலும் மோதிர விரலும் சேருமிடம் வலிக்கும். கதவைத் திறந்து பூட்டி கன்னிப் போயிடும். :)  அந்தப் பித்தளை கொண்டி இருக்கும் இடத்தில் எத்தனை அடுக்காய் மரச் சதுரங்கள். அதன் கீழேயே எத்தனை அடுக்காய் சதுரங்கள். இவற்றை எப்படி சிதைவடையாமல் செதுக்கினார்கள் என ஆச்சர்யப்பட்டதுண்டு. !

இது பழமையான வீடு & கதவு என்பதால் அதிகம் தூசி படிந்துள்ளது. நிலையின் இரு பக்கங்களிலும் உள்ள மர வேலைப்பாடு இது. இடது பக்கம் மூன்று சிற்பங்கள் நேரே மேலே நிலைவாசலில் கீழ் நோக்கியவாறு ஒன்று, வலது பக்கம் மூன்று சிற்பங்கள். பெரும்பாலும் கிருஷ்ணர் சிலைகள்தான். பிடிச்சு வைச்சா பிள்ளையார் என்பது போல இங்கே செதுக்கினா கிருஷ்ணனைத்தான் செதுக்குவோம்னு செதுக்கி இருக்காங்க. நான் பார்த்த அநேக வீடுகளின் நிலைகளில்.

இவர் 193. குழல் ஊதும் நவநீத கிருஷ்ணர். உடைகளின் நெளிவுகளும் சுளிவுகளும் மேலும் மயிற்பீலி போல் சுற்றிலும் வேலைப்பாட்டையும் பார்த்து அசந்தேன். !

 எத்தனை 194. அடுக்கு மரத் தாமரைகள் பாருங்கள். கிட்டத்தட்ட ஐந்து அடுக்கு. அதில் முதலில் வரந்தை பின் மணி அடுக்கு அப்புறம் குட்டி இதழ் அடுக்கு, அதன் பின் நீள் இதழ் இரட்டை அடுக்கு அதன் பின் முத்துக் கோர்த்தாற்போல வெளி விளிம்பு அடுக்கு.
இடது காலை நிறுத்தி வலது காலை மடித்து அதே குழலூதும் கிருஷ்ணர் இன்னொரு பக்கமும். கொஞ்சம் க்ளோசப்பாக. :) இதில் ஆபரணங்கள் அணிந்த கண்ணனும் அவன் காலுறை கோமாதாவும் காட்சி அளிப்பது சிறப்பு.
195. அன்ன பட்சி. அழகான இறக்கை மடிப்புகளோடு அன்னம். அழகு. பக்கவாட்டுச் சுவரிலும் பாருங்கள் என்ன வேலைப்பாடு. ஏதோ க்ளே வைத்து செய்வது போல மரத்தைச் செதுக்கி இருக்காங்க. ஒரு துண்டு கூட வெட்டுப் படலை. அதிலும் அந்தப் பறவையின் காலைப் பாருங்க. விரல் நகம்கூட அழகா செதுக்கப்பட்டிருக்கு. வளைவுகள் நெளிவுகளோட வரையப்படும் ஓவியத்தையே மரத்தில் செதுக்கி உருவமா ஆக்கி இருக்காங்க. !

இந்தச் சிற்பம் எனக்கு இந்தத் திருப்பாவையை ஞாபகமூட்டுது.

196. புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்


 பறவை வடிவில் வந்த பகாசுரன் என்ற அசுரனை வாயைப் பிளந்து அழித்த திருக்கோலம். இதை எப்படி இவ்வுளூண்டு சின்னச் சிற்பத்தில் வடித்தார்களோ !

இது நடு நேர் நிலையில் உள்ள திருக்கோலம்தான் பெரிய திருவடியாயிருக்கலாம்.  சிதைந்திருக்கிறது. ஆனால் பக்கங்களில் இருக்கும்
இறக்கைகளையும் அமைப்பையும் வைத்து இச்சிற்பம் பெரிய திருவடி 197. கருடாழ்வார் என்ற முடிவுக்கு வருகிறேன். பாருங்கள் முத்துச்சரங்களைப் போல ஒரு அழகான வடிவமைப்பு செதுக்கப்பட்டிருக்கு. அது அவரின் கைகளில் இருந்து இரு புறமும் வழிவது போல இருக்கு ஏதேனும் மாலையாக இருக்கலாம்.
ஒரு கையில் கோல் பிடித்து மறுகையில் வால் பிடித்து வலக்காலை காளிங்கனின் சிரசில் ஊன்றி 198. மதங்க நர்த்தனம்.கிருஷ்ணரின் முகத்தில் குழந்தைத்தனம், தொந்தி குலுங்க அங்கவஸ்திரம் மடிப்புகளோடு காற்றில் ஆட இடையில் அணியாரமும் காலில் தண்டைகளும் கையில் கங்கணமும்  அழகு செய்ய ஆபரணங்கள் பூண்ட திருக்கோலம். மடுவின் பக்கவாட்டில் நீர்ச்சுழிகள்  அலையாய் உருள்வது போல செதுக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு.

199. கிருஷ்ணர் கொண்டைன்னு கேள்விப்பட்டிருக்கோம். இதுல கிருஷ்ணர் கொண்டை அழகா வடிவமைக்கப்பட்டிருக்கு. இதுல இருக்குறது  கிருஷ்ணரும் ராதையும் எனத் தோன்றுகிறது . ஏதோ ( பேட் துவாரகா ? ) வில் படகுல போறாங்களா அல்லது ஏதும் வாத்தியம் இசைக்கும் பெண்ணான்னு தெரியல. :(. அதுவும் வலது கையால் மேற்புறம் பிடித்து இடது கையால் கீழ்ப்புறம் வாசிக்கும் வாத்தியம் ஏதும் இருக்கான்னு தெரில. ( ஒரு வேளை இந்தப் பெண் இடது கை வாசிப்பாளரோ என்னவோ. ) ஆனால் இருக்கும் அமைப்பை பார்த்தால் ஏதோ படகுல உக்கார்ந்து அலங்காரத் ! துடுப்பை போடுற மாதிரி இருக்கு. கிருஷ்ணர் பக்கத்துல இரண்டு மூன்று டப்பா  ( ஆர்மோனியம் அல்லது வாத்தியம் ) போன்ற அமைப்பை செதுக்கி இருக்காங்க. ஆனா அது படகோட பக்கவாட்டுப் பக்கமான்னும் தெரில. :(
திரும்ப அதே அன்ன பட்சி வளைவுகளோடும் மடிப்புகளோடும் வாயில் கவ்விய பூங்கொடியின் இதழ்களோடும்.
திரும்ப நாம இப்போ 200. இடது பக்க கொண்டிக்கு வந்துட்டோம். இரு புறமும் இருக்கும் பிரம்மாண்டக் கொண்டிகள் அழகு மற்றும் வலு. அதன் வேலைப்பாட்டைப் பாருங்கள். நடுவில் தாமரையாய் விரியும் பீடத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. இது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டையும் தாண்டி இருக்கலாம். இதை எல்லாம் எங்கே உருக்கினாங்க வார்த்தாங்கன்னே யாருக்கும் தெரியலை. அதன் வடிவமைப்பைப் பாருங்க.

மேலே 201. காவலாய் ஒரு திருவாச்சி. அதன் இருபுறமும் கிளிகள் , நடுவில் ஒரு தாமரை. அதன் பின் விரியும் கொண்டி ஆங்கில பி எழுத்தைப் படுக்கப்போட்டது போல வளைந்து முடியும் இடத்தில் கனத்த மடிப்புகளுடன் இருக்கு. கைப்பிடிக்க எளிதாகவும் இருக்கு. :) !  இந்த இடத்தைப் பிடித்துத்தான் கதவை மூடவும் திறக்கவும் செய்வோம். !


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


6 கருத்துகள்:

  1. கலைநயம் மிக்க வேலைப்பாடுகள்! கண்டு ரசித்தேன்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. ஒரே ஒரு முறை காரைக் குடிக்கு வந்திருக்கிறேன்
    கதவுகளைக் கண்டு வியந்திருக்கிறேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. நன்றி சுரேஷ் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. எத்தனை வேலைப்பாடுகள். இண்டு இடுக்குகளில் தூசி புகுந்து கொண்டிருப்பதால் கலைநயம் மறைந்து இருக்கிறது. சுத்தமாக இருக்கும்போது பார்த்தால், இவற்றின் அழகு இன்னும் தெளிவாய் தெரியும்....

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...