எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6

139. இது அரிவாள்மணை -- அருகாமணை. ஆனால் தேங்காய் திருகியும் அதற்கான மடலும் இணைந்தது. அநேகமாக இதுபோல் காரைக்குடியில் மட்டுமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.என் அம்மாவிடம் நாங்கள் போகும் ஊரில் பழகும் தோழியர் & பக்கத்து வீட்டுக்காரர்கள் இதுபோன்ற அருகாமணை வாங்கித்தரச் சொல்லிக் கேட்பார்கள். ஒவ்வொரு முறை நாங்கள் ஊருக்குத் திரும்பும்போது அநேகருக்கு இம்மாதிரி அருகாமணை பார்சல் ஆகி இருக்கும். :)

அதே அரிவாள்மணை இன்னொரு கோணத்தில். இதில் திருகினால் தேங்காய் பூப்போல வரும். மிக்ஸியில் பவுடராகிவிடும். அல்லது திப்பி திப்பியாக வரும்.



140. ஹரிக்கேன் விளக்கு -- அரிக்கேன் விளக்கு என்று பேச்சுவழக்கில் சொல்வார்கள். முன்பு எல்லாம் கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் முட்டைக்கிளாஸ் விளக்கோ அரிக்கன் விளக்கோ கட்டாயம் இருக்கும். இரவில் நன்கு துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி ஏற்றி வைப்பார்கள். கரண்டுப்போய்விட்டால் குழந்தைகள் பயந்து போய்விடுவார்கள் என்று இரவு முழுவதும் இவை எரியும். நைட்லாம்ப் எஃபக்டில் :)


இதன் கைப்பிடி மிக அழகானது, இடம் விட்டு இடம் தூக்கிச் செல்லலாம். கம்பெனி பேர் எல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள் பாருங்க. ஆயுத பூஜை சமயத்தில் இவற்றுக்கெல்லாம் கூட சந்தனம் குங்குமம் வைப்பதுண்டு :)


141. காடா விளக்கு, முட்டைக்கிளாஸ் விளக்கு, மெழுகுதிரி விளக்கு, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு, ஸ்லேட்டு விளக்கு  என்று எத்தனை இருந்தாலும் இந்த ஹரிக்கேன் விளக்கு ஏனோ ரொம்பப்பிடிக்கும். கரண்டுப் போய்விட்டால் இதன் பக்கம் அமர்ந்து பாடம் படிப்போம். இரவு உணவு கூட இதைச்சுற்றி அமர்ந்து உண்போம். மிக நெகிழ்வான தருணங்கள் இதனுடன் வாய்த்திருக்கின்றன.

142. விநாயகப் பானைகள். பூசையின்போது முதன் முதலில் விநாயகப் பானையில்தான் வெள்ளைச் சோறு வடிப்பார்கள்.இவற்றை பூஜித்துப் பின் படைப்பார்கள்.


143.நெல் அரிக்கும் கரண்டி. சோறு அள்ளும்கரண்டி. இது நெல் அவிக்கும் சமயங்களில் நெல் வெந்துவிட்டதா என அரித்துப் பார்க்கும் கரண்டியாகவும். கிளறிவிடவும் உபயோகப்படும். பூசை சமயங்களில் சோறு அள்ளும் கரண்டியாகவும் பயன்படுத்துவார்கள். மலைபோல் வடித்த சோற்றை ஒரு இடத்தில் பாய்விரித்து அதன் மேல் காடாத்துணியை நனைத்துப் போட்டுக் கொட்டி வைத்திருப்பார்கள். அந்தச் சோற்றைப் பரிமாறும்  சில்வர் அண்டாக்களில் அள்ளிக் கொட்ட  இது பயன்படும்.


144. தண்டாயுதபாணி பூசையின்போது தண்டத்தையும் வேலையும் குளிப்பாட்டப் பயன்படும் பீடம். பித்தளையாலும் செம்பாலும் ஆனது.


145. வெள்ளிச் சட்டியும் மாவிளக்கும். பச்சரிசி வெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்ட மாவிளக்கில் நெய்யும் பஞ்சுத் திரியும் போட்டுப் பூசையின்போது பெண்கள் தண்டாயுதபாணிக்கு எதிரில் ஏற்றுவார்கள்.


146. பூசைக்கு உபயோகித்த அண்டா குண்டா சாமான்கள். ஆல்வீட்டில் கழுவிக் காயப்போடப்பட்டுள்ளன. இது எல்லாம் வீட்டு சாமான். எனவே பளிச் பளிச்சென்று மின்னுது. இப்போது எல்லாம் பாத்திரங்களை வாடகைக்கு எடுத்து சமைக்கிறார்கள். அவற்றின் பின்புறம் கருப்பாக காணச் சகிக்காது.


எம் கடன் பணி செய்து கிடப்பதேன்னு எல்லாம் உக்கார்ந்திருக்கு :)


பூசையின் போது படைக்கப்பட்ட அன்னமும் வெஞ்சனங்கள் நிரம்பிய பித்தளை அலுமினிய அண்டாக்களும் அலுமினிய வாளிகளும் கரண்டிகளும்.


சரி பசிக்குது சாப்பிட்டுட்டு வரேன் :)


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்




8 கருத்துகள்:

  1. வெகு அழகு. அற்புதம் தேன்.நன்றி மா.

    பதிலளிநீக்கு
  2. இன்று உங்களுடைய பெரும்பாலான பதிவுகளில், விட்டுப் போனவைகளை முதன் முறையாகவும், ஏற்கனவே படித்தவைகளை இரண்டாம் முறையாகவும் படித்தேன். வங்கியில் பணிபுரிந்த காலத்தில், செட்டிநாட்டு நண்பர்கள் இல்லங்களில் நடந்த திருமண வைபவங்களுக்கு சென்ற நினைவுகள் திரும்ப வந்தன.

    நீங்கள் வலைப்பதிவினில் சொன்ன, செட்டிநாட்டு வீடுகள், பொருட்கள், உணவுகள் பற்றிய அனைத்தும் , இதே வண்ணப் படங்களுடன் ஒரே நூலாக வெளிவர வேண்டும். இந்த நூல் பின்னாளில் தமிழக வரலாறும் பண்பாடும் நூல்கள் வரிசையில் தனித்ததோர் இடத்தை பெறும் என்பதில் ஐயமில்லை.

    பதிலளிநீக்கு
  3. அழகான கலையம்சம் நிறைந்த பொருட்கள் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகவும் கவர்ந்தன! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  5. உண்மை தான் தேனம்மை! இந்த மாதிரி அழகான அரிவாள்மனையை நான் பார்த்ததேயில்லை. தஞ்சையில் தேங்காய் துருவும் வசதியுடன் அரிவாள்மனை உண்டு. ஆனால் தேங்காய்த்துருவலை சேமித்து வைக்கவும் இப்படி ஒரு இடம்! வழவழவென்று அத்தனை அழகு! வாங்க வேண்டிய லிஸ்டில் இந்த அரிவாள் மனையையும் சேர்த்து விட்டேன். காரைக்குடியில் எங்கே கிடைக்குமென்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. காரைக்குடியில் கொப்புடையம்மன் கோயில் பின்புறம் கிருஷ்ணன் கோயிலருகில் உள்ள கடைகளில் கிடைக்கும் மனோ மேம் :)

    பதிலளிநீக்கு
  7. அருவாள்மனை கிடைக்குமிடத்தை உடனடியாகச் சொன்னதற்கு அன்பு நன்றி தேனம்மை!

    பதிலளிநீக்கு
  8. நன்றி வல்லிம்மா. :)

    உங்கள் கருத்தைப் படித்த அன்று கண்கள் கலங்கி விட்டன. இளங்கோ சார். நான் ஒரு பக்கத்தினரின் வாழ்வை ஆவணப்படுத்தவேண்டும் என்று இதில் ஈடுபட்டுள்ளேன். (இனப்பதிவாக ஜாதிப் பெருமைப் பதிவாக இது முகநூலில் எதிர்ப்பைக் கண்டபோது ) முதன் முறையாக என் முயற்சிகளைப் பாராட்டி அதைப் புத்தக வடிவில் கொண்டு வரலாம் என நம்பிக்கை கொடுத்த உங்களுக்கு ஓராயிரம் நன்றிகள். :)

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி மனோ மேம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!



    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...