எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
எய்தது என்ன....?
அவரவரே நிரம்பிய
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..
குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...
பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?
அட்சய பாத்திரமாயிருக்க..
அடுத்தவரிடம்
பிட்சைப் பாத்திரம் ஏந்தி..
குத்திய முள் எல்லாம்
பிடுங்கிப் போட்ட பின்னும்
தொடர்ந்து வந்து
கொண்டு வலி மட்டும்...
பரமபதப் பாம்புகளால்
ஏறுதலும் இறங்குதலுமான
வாழ்வில் எது குறிக்கோள்..?
எய்தது என்ன..?
செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010
நட்பும் ..துணையும்..
அறிமுகம் ஆனவுடனே
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
முகம் பார்க்கக் குழைந்து
குரல் கேட்க விழைந்து
விருந்துண்ண அழைத்து
விடியுமட்டும் கதைத்து
முடியுமட்டும் முயன்று
முடிந்தவரை அடைந்து
நீர்த்துப் போகிறது அல்லது
மந்திரிக்க வேண்டிய
விஷக்கடியாகிறது
திங்கள், 23 ஆகஸ்ட், 2010
சனி, 21 ஆகஸ்ட், 2010
மாயாவி..
நீ கொடுத்த கோப்பை அப்படி
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..
எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..
நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..
நீ இல்லாத போதும்
எனக்கானதை சுரந்து கொண்டே..
எல்லா மனத்திலும்
வாணவேடிக்கை உன் வருகையால்
என் பெர்சியாய்டே..வா..
நிலவாய் மேகத்துள் மறைந்து..
அதுதானே உன் கவர்ச்சி..
எண்ணத்தீயே..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)