எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 24 நவம்பர், 2016

100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும். . ஒரு பார்வை.


100 சிறந்த சிறுகதைகளில் முதல் 25 ம், சிறந்த பச்சைக் கனவும்

எஸ்ராவின் முன்னுரையில் கதைக்கரு, சொல்லும் முறை, மொழி,வடிவம், தனித்துவம் இத்தோடு பன்முகத்தன்மை பொறுத்துத் தேர்ந்தெடுத்ததாகக் கூறி இருக்கிறார். பிரைமா லெவி கூறிய ஒன்பது காரணங்கள் சிறப்பு.

அதோடு இதையும் சேர்த்துக்கலாம். ஏதேனும் மெசேஜ் சொல்லணும்னு நினைக்கிற, தனது வட்டார வழக்கில், பேச்சு மொழியில் கதை சொல்ல நினைக்கிற சாமான்யர்களும் சமீபமா வலைத்தளம்,முகநூலில் எழுத ஆரம்பித்து இருக்கிறவர்களும் கூட நல்ல கதைசொல்லிகளாக மாறிவருகிறார்கள்.

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

தேவையானவை :-

புதன், 23 நவம்பர், 2016

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும். ( அவள் விகடனில் )

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களும் பாதுகாப்பும் :-

அவள் விகடன் இணைப்பில் இங்கேயும் படிக்கலாம்.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு யுக்திகள்!

அம்மி கொத்துறோம், அருகாமனை சாணை பிடிக்கிறோம்., சவுரி முடி வேணுமா, கூடை சேர் பின்னித் தரோம் என்று சொல்லி என்று வேவு பார்த்து உளவு சொல்லி கிராமப்புறங்களில் தனியா இருக்கும் இல்லத்தரசிகளைக் குறிவைத்து வீட்டில் கொள்ளை நடக்கிறது.  நகை பாலீஷ் பண்ணித் தரோம் என்று சொல்லி அவர்கள் கரைக்கும் சொல்யூஷனில் நகையை உருக்கி எடுத்துக் கொள்வதும் நடக்கிறது.

”ஒரே வெய்யில் தாகமா இருக்கு. கொஞ்சம் தண்ணீர் தாங்க  ” என்று விற்பனைப் பிரதிநிதி உடையில் கேட்ட ஒரு பெண்ணிற்கு இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்ற பெண்ணைப் பின் தொடர்ந்து அவரும் இன்னும் சிலரும் உள்ளே வந்து கத்தியைக் காண்பித்து போட்டிருந்த நகைககளைக் கழட்டிச் சென்றுவிட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் பேசி அப்பா அம்மா மற்றும் வீட்டு விபரத்தை விசாரித்து வீட்டுக்கு வந்து அந்தப் பெண்ணின் அம்மாவிடம் அவரது கணவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன்னை ரேஷன் சாமான் வாங்க அனுப்பியதாகச் சொல்லி ரேஷன் கார்டு பணம் பைகள் வாங்கி  ஒரு ஆள் எஸ்கேப்பாகிவிட மாலை வரை பொருட்கள் வரும் என்று அந்தத் தாய் காத்திருக்கிறார். மகளும் கணவரும் வந்த பின்தான் உண்மை தெரிந்திருக்கிறது ஏமாந்தது.

ஞாயிறு, 20 நவம்பர், 2016

தர்மதரிசனமும் தாய்க்கிழவியும்.

1121. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. ( இன்று ) அவர் நல்லவராவதும் தீயவராவதும் சோஷியல் நெட் வொர்க் கையிலே.

1122. குழந்தைகளால் நிரம்பி வழிகிறது முகநூல்.. :)
.
.ஒரு கார்ட்டூன் நெட்வொர்க்கும், ஃபேபி ஃபுட்ஸும் தான் மிஸ்ஸிங்

1123. தீபாவளிதான் முடிஞ்சுருச்சே.. லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் வைச்சிருந்தும், ரூல்ஸ்படி சரியா ஓட்டியும் இன்னும் அப்பாவி டூவீலர்களை ரோட்டில் பிடித்து ஏன் நிறுத்துறீங்க.

1124. நளாயினி கண்ணகி சாவித்ரின்னு அடுத்த புயலுக்குத் தமிழ்ப் பேரா வைங்க. நீலம் காத்ரீனான்னு வைக்காம. ! :)

1125. Age aaga aaga fat aa mattumilla..dwarf aavum aagitu iruken 👻

1126.எத்தனை முறை ப்லாக் போஸ்டைப் போட்டாலும் டிவிட்டர் போல நீ ஏற்கனவே போட்ட போஸ்ட் இது என லொட்டு லொசுக்கு காரணம் சொல்லாமல் இங்கிட்டு வாங்கி அங்கிட்டுப் போட்டுக்குது கூகுள்.

1127.Tv la pattu partha kooda net pack gali aayidumonnu tension aa irukey. Hahaha. #net_addict

1128.போட் ஓட்டுறவங்கள எல்லாம் அரசு பஸ் ட்ரைவரா போட்டிருக்காங்க. உயிரைக் கையில பிடிச்சிட்டு உக்கார்ந்து வரவேண்டியதா இருக்கு. பஸ் வேற 1008 ஸ்பேர் பார்ட்ஸோட சில்லறை சிதர்றாமாரிக் குலுங்குது. மழை பேஞ்சா ஓட்டைக் கப்பலாட்டம் எல்லா ஜன்னல்லயும் ஒழுகுது. எங்க ஓடி உக்கார்றதுன்னு தெரியாம பிடிக்க சரியான கம்பியும் இல்லாம தாவு தீர்ந்திடுச்சு. பிபி ஹை ஆயி தலை 180 டிகிரில சுத்துது. உடம்போ 360 டிகிரில.. யப்பா சாமி என்ன உயிரோட எறக்கி விட்ருன்னு கெதறாததுதான் மிச்சம். இந்த ஸ்டேடஸ போட தப்பிச்சு வந்திருக்கனாக்கும் ..

1129.தர்ம தரிசனம். ஒரு தர்ம சங்கடம். பழனி கோயிலில் திருக்கல்யாணம் அன்று தெரியாமல் சென்று க்யூவில் மாட்டி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து சன்னதி திறந்தார்கள்.

சனி, 19 நவம்பர், 2016

சாட்டர்டே போஸ்ட். செந்தில்குமாரை மாற்றிய சங்ககிரி துர்க்கத்தின் சம்பவம்.

கூட்டாஞ்சோறு என்ற பதிவில் எழுதி வரும் சகோ செந்தில்குமாரின் பல இடுகைகளைப் படித்திருக்கிறேன். ஏர்போர்ட்ஸ், ரயில்வேஸ்டேஷன் மட்டுமல்ல. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் வாழும் பெண்களுக்கு நடந்து வரும் கொடுமைகள் பற்றியும் இவரது பதிவுகள் விழிப்புணர்வை உண்டாக்கியது.

இவர் தினத்தந்தியில் ஃப்ரீலான்சராகவும் ”அக்ரி டாக்டர்”, “ஹாலிடே நியூஸ்” ஆகிய பத்ரிக்கைகளின் இணை ஆசிரியராகவும் இருக்கிறார். ”சிறந்த விவசாயப் பத்ரிக்கையாளர் “ விருதும் வாங்கியவர் !.

என்னுடைய குல்பர்கா கோட்டை பற்றிய கட்டுரை ஹாலிடே நியூஸில் இடம்பெறச் செய்தவர். தொடர் முயற்சியாளர். கிட்டத்தட்ட 6000 கட்டுரைகள் எழுதி இருக்காராம். மயக்கம் போட்டு விழுந்திடாதீங்க. :) 

இவரிடம் இந்த வார சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது விழிப்புணர்வு உண்டாக்க வேண்டிய ஒரு விபரம் பற்றிப் பகிர்ந்து கொண்டார். தலைப்பைப் பார்த்தவுடனே பகீர் என்றது. இன்னும் இந்தக் கொடுமைகள் தொடர்கின்றன. சீக்கிரம் விமோசனம் பிறக்க வேண்டும் .


////பொம்பளப் புள்ளன்னா கொன்றுவாங்க.. இல்லம்மா..////


சகோ தேனம்மை லெக்ஷ்மணன் எனது இளமை கால நிகழ்வுகள் ஒன்றை எழுதி அனுப்ப சொல்லியிருந்தார். அதற்காக எழுதியது.

Related Posts Plugin for WordPress, Blogger...