எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2016

லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல்  பற்றி படித்துப் பாருங்கள் பகுதியில் வந்துள்ளது.

நான் ஃப்ரீலான்சிங்காகப் பணிபுரிந்த லேடீஸ் ஸ்பெஷலில் சாதனை அரசிகள், ங்கா, ஆகியனவும் நூல் முகத்தில் வெளிவந்துள்ளன. சிவப்புப் பட்டுக் கயிறு நூலையும் அறிமுகப்படுத்திய ஆசிரியை திருமதி கிரிஜா ராகவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அவ்ளோ மோசமாவா ஆயிடுச்சு காரைக்குடி.. ?

காரைக்குடியில் தற்போதெல்லாம் அடிக்கடி வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்று வருவதாகவும் அதற்காக காரைக்குடி நகர் வாழ் பொதுமக்களுக்குக் காவல்துறையின் அறிவுரைகளையும் படிக்க நேர்ந்தது.

சில வருடங்கள் முன்பு தனியே வீதியில் ஆறு மணிக்கு மேல் செல்லும் பெண்களின் - 414. சாகக் கொடுத்த ஆச்சிகளின் ( விதவைப் பெண்களைக் குறிப்பிடுவார்கள் இப்படி )   ( அநேகமாக முதியவர்கள் ) 415.கழுத்துச் சங்கிலியைப் பறித்துச் செல்லும் அவலம் நிகழ்ந்தது. இங்கே பெரும்பான்மையான விதவைப் பெண்டிர் ஒற்றைத் தங்கச் சங்கிலியாவது அணிந்திருப்பர். அவர்களிடம் பறித்துச் சென்றவர்கள் கேவலமானவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த உறவினர் - சுமங்கலிப் பெண்மணி கோயிலில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் லேசான இருட்டில் அவரது கழுத்துத் 416. தாலிச் சங்கிலியை யாரோ பறித்துச் சென்றுவிட அதன் பின் துயரத்தில் தோய்ந்து அவர் மடிந்தே போனார். 

சனி, 10 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர். மனோரமா ஆச்சியின் அன்பில் நெகிழ்ந்த உதவி இயக்குநர் ராம் பெரியசாமி.

முகநூலில் யாழகிலன், அருண்கருப்பையா இருவரும் என்னை அம்மா என விளிப்பார்கள். அதேபோல் உதவி இயக்குநர் ராம் பெரியசாமி  மம்மி என்பது போல் ”மீ ” என விளிப்பார். :) மிக அதிக அளவு என் பதிவுகள்  எல்லாவற்றையும் வாசித்து கருத்துக் கூறிவிடுவார்.

எளிய மனிதருக்கு இரங்கும் குணம். ஊனமுற்றோரின் பால் பாசம், குழந்தைகள் மேல் அதீதப் பிரியம் என அன்பாலே செய்த மனிதர் அவர். சினிமாத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகின்றார். அவரது பல கவிதைகள் நான் வாசித்திருந்தாலும் இந்தக்கவிதை என்னை அசைத்த ஒன்று. 

////சென்னை அதிவேக
ரயிலின் கூட்டநெரிசலில்
அசதியான முகங்களின்
பார்வைகள் ஜன்னல்வழியே
கடத்திக் கொண்டிருப்பதும்...
தனியான என் மௌனங்களை
ஞாபகங்கள் கொத்தித்தின்றுக்
கொள்ளும் இவ்வேளையில்....
முகம் சூம்பி...
உடல்சூம்பி..
கைகள் சூம்பி....
ஒருவன் இடறி நிற்கையில்..
அந்த குழந்தையின் அழுகை
அவனால்தான் இருக்க முடியும்..
ஐந்துரூவாய் பேனாவை
அவன் விற்கையில்
கடவுளே இவனை
கடத்திச்செல்லென
ப்ரார்த்திக்கையில்
" நுங்கம்பாக்கம் ஸ்டேசன்
வந்திருச்சி... இறங்கிக்குங்க...
பக்கத்து ஸ்கூல்ல போலியோ
மருந்து போடுறாங்க....
தாய்களே...மறக்காதிங்க"..
அவன் தவழ்ந்து செல்கையில்
#முகவரியற்ற_ரயில்பயணங்களில்....
எல்லோர்க்கும் முகவரியை அளித்திருந்தான்.////

///ராம் பெரியசாமியிடம் அவர் பணியாற்றிய சினிமாத்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரச் சொன்னேன்.  ////

வணக்கம் ராம் பெரியசாமி திரைப்பட இயக்குனர்...


நான் உதவி இயக்குனராக பதினைந்து படங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.. கடைசியாக நான் வேலை செய்த படம் "ஜீரோ".. நிறைய அனுபவங்களை பெற்றுள்ள நான் தற்போது உங்களிடம் ஓர் சிறிய அனுபவத்தை பகிர உள்ளேன்....

வியாழன், 8 செப்டம்பர், 2016

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள்- சில படங்கள்.

கல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள் சில படங்கள்.ஆகஸ்ட் 6 ஆம் தேதிக் கொண்டாட்டத்தின் போது காமராஜர் அரங்கில் எடுத்தது.

சுதாசேஷய்யன் அவர்கள் பேசியபோது எடுத்தது. 

கோகுலம் சார்பாக நடத்தபட்ட நிகழ்ச்சிகள் உணவுக்குப் பின் மாலைதான் தொடங்கின. எனவே முன்னே சென்று அமர்ந்து புகைப்படம் எடுத்தோம்.
குழந்தைகள் நடனம், குறும்படம் என்று சிறப்பாக இருந்தது நிகழ்வு.
ஃபோல்க் டான்ஸ்,
Related Posts Plugin for WordPress, Blogger...