எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 ஜூன், 2010

புறக்கணிப்பு...............

வைத்துக்கொள் அல்லது
தூக்கிப் போடு..
இன்னும் பலம் சேர்த்து
நீந்தி வருவேன்..

இன்னமும் படிக்கப்பட்டாத
பக்கங்களோடு
புதிதான வாசனையுடன்...

இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
என்பதால் நான்
இல்லாமல் போவதில்லை...

சனி, 5 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜாம்மா., வித்யா நான்..

லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் மாத இதழில் என்னுடைய ”நீரெழுத்து கவிதை” (ஏழாம் பக்கத்திலும் ) மற்றும் வித்யா(விதூஷ்) உடைய ”இன்னிக்கு என்னாச்சு தெரியுமா” கதை ., 24 ., 25 ஆம் பக்கத்திலும் ) வெளிவந்து இருக்கு..
ஐந்தாம்., ஆறாம் பக்கத்தில் முன்னுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்காங்க..
எங்கள் எழுத்துக்கு முதல் அங்கீகாரம் அளித்து தன் பத்ரிக்கையில் வெளியிட்ட கலைவாணியை அவர் அலுவலகத்தில் வித்யாவுடன்(இவரும் சரஸ்வதி) சந்தித்து ... என்னையும் கடைக்கண் நோக்கி எழுத வைத்த அற்புத சக்தி .. கல்விக் கடவுள் சரஸ்வதியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..

வெள்ளி, 4 ஜூன், 2010

மீள் குடியேற்றம்

மீனெடுத்துத் தேனெடுத்துக்
காடுவெட்டிக் கழனிசெய்து.,
தோளணைத்து., தோள்கொடுத்து.,
வாகை சூடி., விளையாடி.,
வாழ்ந்து வந்தோம் யாம்
பிறந்ததென்று நம்பிய மண்ணில் ..

உயிரோடும் கொல்கின்றீர்..
உயிரற்றும் கொல்கின்றீர்..
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
முள்ளிவாய்க்காலிலும் தொடர..
கௌரவமாய்ச் சாவதற்கும்
கொடுப்பினையில்லை எமக்கு..

வியாழன், 3 ஜூன், 2010

பேரன்பின் தந்தைக்கு பிரிய மகளின் வாழ்த்து

முத்தமிழும் முக்கனியும் மூவேந்தர் காத்த நாட்டில்
தித்திக்கும் செம்மொழியை சீர்கொடுத்து சிறப்பாக்கி
எத்திக்கும் ஏற்றும்படி எழிலான உருக்கொடுத்து
சித்திக்கும் செந்தமிழே..! சிறப்பாக வாழியவே.. !!

ஐந்துமுறை அமர்ந்தாய் ஆட்சிக் கட்டிலிலே..
அரவணைப்பாய் அனைவரையும் அன்பினிலே பண்பினிலே
அழகான பாலங்கள் ., அனைத்து நலத் திட்டங்கள்.,
அருமைச் செந்தமிழே ..! ஆருயிரே வாழியவே..!!

உடன்பிறப்பாய்க் கொண்டாயே உடன்வந்த யாவரையும்
உன்கடிதம் இல்லாமல் ஒருநாளும் விடிந்ததில்லை..
உனையறிந் தேன்எம் அருணாசல ஐயா மூலம்..
உவப்பான செந்தமிழே..! ஒருநூறு வாழியவே..!!

புதன், 2 ஜூன், 2010

கிருஷ்ணப் ப்ரேமி

பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...

நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?

இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...

ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி
Related Posts Plugin for WordPress, Blogger...