எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 ஜூலை, 2010

டாக்டர் கல்லாறு சதீஷ்






தமிழன் என்று சொல்லடா., தலை நிமிர்ந்து நில்லடா.. என்ற வார்த்தை நம் அன்பு நண்பர் கல்லாறு சதீஷுக்கு ரொம்பப் பொருந்தும்..

மொழிக்காக விழியிழந்தவர் தெரியும்... மொழிக்காக பதினெட்டு வயதில் முள்முடி சுமந்தவர் நம் சதீஷ்... அருள்ராசா நாகேஸ்வரன்.. என்ற சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழர்.. இவர் நம்மிடம் பேசப் பேச.. இ்னிமையும்.. நல்லெண்ணங்களும் பொங்குவது இயல்பு.. நேர்மறை எண்ணங்களுக்குச் சொந்தக்காரர்..

வெள்ளி, 4 ஜூன், 2010

மீள் குடியேற்றம்

மீனெடுத்துத் தேனெடுத்துக்
காடுவெட்டிக் கழனிசெய்து.,
தோளணைத்து., தோள்கொடுத்து.,
வாகை சூடி., விளையாடி.,
வாழ்ந்து வந்தோம் யாம்
பிறந்ததென்று நம்பிய மண்ணில் ..

உயிரோடும் கொல்கின்றீர்..
உயிரற்றும் கொல்கின்றீர்..
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
முள்ளிவாய்க்காலிலும் தொடர..
கௌரவமாய்ச் சாவதற்கும்
கொடுப்பினையில்லை எமக்கு..

சனி, 1 ஆகஸ்ட், 2009

நாம் தமிழர்

ராஜராஜன் காலத்துக்கும்
முற்பட்ட குரோதம் இது

தஞ்சையில் நாம் சிங்கள நாச்சியார்
திருக்கோயில் எழுப்பியுள்ளோம்
ஆனால் நம் சீதையைக் கூட
சிறை வைத்தவர்கள் அவர்கள்

வெலிக்கடைச் சிறையிலும்
முள்ளிவாய்க்காலிலும் மாளவும்
முள் வேலியில் பாழ் வெளியில்
வாழவுமா நாம் பிறந்தோம்?
Related Posts Plugin for WordPress, Blogger...