எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 பிப்ரவரி, 2010

ராமனின் மனைவி

முகமற்றவள் ..மண்ணில் பிறந்தவள்..
மண்ணால் விழுங்கப்பட...
சிவதனுசை நீ எடுத்த நொடி..
உன் கைவசம் முடிவு.. என் வாழ்வு..
அம்புறாத்துணியோடுதான் பார்த்தேன்..
நானே எய்யப்படுவது அறியாமல்...

வனவாசத்திலும் மரவுரியுடன்
உன் பின்னே சுற்றித்திரிய விழைவில்..
உன் மனவாசத்தில் இருந்தாலும்
என்னைத் தவிர்த்துச் செல்லும் விழைவில் நீ..

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் நண்பன்

அவன் அம்மாவின் செல்லக் கடைக்குட்டி..
அவ்வப்போது கதைப்பதும்., அவளின்ட மடியில்
படுப்பதுவும் அலுக்காத ஒன்று...
வளர்ந்தகுழந்தைகளுக்குத் தகப்பன்... வளராமல்..
பால்யத்தில்... கேட்டால்....
எப்போதும் எனக்கு 23 என்பான்...
அவன் கண்ணுக்குள்ளும்.. ஆகிருதிக்குள்ளும் ..
அவ்வப்போது பதுங்கு குழிகளும்., ஷெல்களும்.,
கண்ணிவெடிகளும்., அம்மாவுக்கான பாசமும்
படபடப்புடன்....

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

என்ன தவம் செய்தேன் !!!

*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,

வியாழன், 21 ஜனவரி, 2010

இன்னா(வோ) நாற்பது

சத்புத்திரருக்கும் இருக்கக் கூடும்..
சொத்துபற்றிய ஏக்கம்..

அடகுக்கடை சாமி பூவில் வடிந்தது தண்ணீர்..
உழைத்தவனின் கண்ணீர்..

பாட்டியும் கதைகேட்கிறாள் குழந்தைகளோடு..
தொலைக்காட்சியில்..

வீட்டில் வேலைக்காரி
உடல் மெலிய ஃபிட்னஸ் சென்டர்...

செவ்வாய், 19 ஜனவரி, 2010

இருவருக்கும்

பனைமரங்களும் தென்னைமரங்களும்
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...