எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

மலையறுப்பு

மலையின் முலை மேகம் முட்டி
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...

வெள்ளி, 15 ஜனவரி, 2010

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்

சொல் பேச்சு கேட்பதில்லை ..
அறிவுரை கேட்பது விட ஐ பாட் கேட்பது ஆனந்தம்.
தினமும் பைக்கை உறுமச்செய்கிறான் ...
என் கட்டயத்தின் பேரில் ஹெல்மேட்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்.................................................

புதன், 13 ஜனவரி, 2010

சூரியப் பொங்கல்

அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....

சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...

சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....

திங்கள், 11 ஜனவரி, 2010

நாண(ந)யம் நாகப்பன்

"தோட்டத்தில் எல்லாவிதைகளும்
ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு
ஒரே சூரியன் கீழ்
ஒரே கிணற்றின் தண்ணீரில்...

ஒன்று மட்டும் ஆழமாய் வேர்பாய்ச்சி
அகலமாய் கிளைபரப்பி
அண்டமெல்லாம் விரிந்து.... "

அதுதான் நாண(ந)யம் நாகப்பன் அவர்கள் .

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஐந்தொகை

* அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்
அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை
வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேஷ தினங்களில்
அநேக பலகாரங்கள்
ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...

Related Posts Plugin for WordPress, Blogger...