எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 ஜனவரி, 2010

நாண(ந)யம் நாகப்பன்

"தோட்டத்தில் எல்லாவிதைகளும்
ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு
ஒரே சூரியன் கீழ்
ஒரே கிணற்றின் தண்ணீரில்...

ஒன்று மட்டும் ஆழமாய் வேர்பாய்ச்சி
அகலமாய் கிளைபரப்பி
அண்டமெல்லாம் விரிந்து.... "

அதுதான் நாண(ந)யம் நாகப்பன் அவர்கள் .

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஐந்தொகை

* அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்
அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை
வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேஷ தினங்களில்
அநேக பலகாரங்கள்
ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்

கிராமம் சார்ந்த
காங்க்ரீட் காடு எனது .
மௌனமாய் நகரும் பல்லி .,
ஓடி ஒளியும் கரப்பான்.,
தத்தித் தாவும் பாச்சை.,
புத்தகங்களுக்குள் சில்வர் ஃபிஷ்.,
ஓரத்து ஒட்டடைக்குடியிருப்பில் சிலந்தி.,
பருப்புகளில் வண்டு .,
காய்களில் பச்சைப்புழு.,

வியாழன், 7 ஜனவரி, 2010

வாடகை புத்தகம்

பழைய நாட்குறிப்புகளைத்
திறக்கும் போதெல்லாம்
ஒரு பறவையின் இறக்கையாயும்
குட்டி போடும் மயில் தோகையாயும்
பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
நழுவி விழுகிறது உன் நினைவு...
நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள் ...

புதன், 6 ஜனவரி, 2010

புத்தகங்கள்

புங்கைப் பூக்கள் மிதக்கும்
குளத்தின் கல்லில்
கால் நனைத்து அமர்ந்து...
மீன்களைப்போல் எண்ணங்கள்
என்னைக் கடித்துக்கொண்டு...
தொலைந்து போகிறேன் ...
ஒவ்வொரு சின்ன அலையிலும் ...
அழித்து அழித்து எழுதுகிறது ..
ஒவ்வொரு பெயராய்...
Related Posts Plugin for WordPress, Blogger...