எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SAKUNTALA MADAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SAKUNTALA MADAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜூலை, 2015

முன்னோடிகள் மறைவதில்லை.

கல்லூரியில் சேரும் முதல் நாள். முதல்வரைச் சந்திக்க வேண்டும். ஒரே டென்ஷன்.தந்தையுடன் ரிஷப்ஷனில் நின்றது ஞாபகத்தில் பக்கத்தில் ஒரு சின்ன கெபி. குழந்தை யேசுவைச் சுமந்த மேரி கண்ணில் பட கல்லூரி பற்றிய பயத்தோடு சின்ன பெரிய வேண்டுதல்கள் எல்லாம். முதல்வர் சந்திப்புக்குப் பின் ராகிங் இருக்குமே. அதுதான். 

என்னுடைய டர்ன். அப்பாவோடு உள்ளே நுழைந்து மாலை வணக்கம் சொன்னேன். கண்ணாடியணிந்த கம்பீரமான உருவம். சிம்மம்போன்ற பார்வை. நான் மிரட்சியோடு இருக்க அப்பா’ கெமிஸ்ட்ரில நல்ல மார்க் இருக்கதால பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி க்ரூப் கிடைக்குமா ‘ என்று கேட்டார். லேசான கனிவோடு கேட்ட கோர்ஸில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் சகுந்தலா மேடம் . கொஞ்சம் பயமும் அதிகம் நம்பிக்கையுமாக வெளியே வந்தேன். 

Related Posts Plugin for WordPress, Blogger...