ஜெர்மனி சென்றிருந்தபோது நான் மிகவும் ரசித்தவை ரயில் , மெட்ரோ ரயில், மோனோ ரயில், ட்ராம் போக்குவரத்துக்கள்.
இது ஓபர்ஹௌஸன் என நினைக்கிறேன். வூபர்டாலா எனவும் தெரியவில்லை.
ஜெர்மனி சென்றிருந்தபோது நான் மிகவும் ரசித்தவை ரயில் , மெட்ரோ ரயில், மோனோ ரயில், ட்ராம் போக்குவரத்துக்கள்.
இது ஓபர்ஹௌஸன் என நினைக்கிறேன். வூபர்டாலா எனவும் தெரியவில்லை.
ஓபர்ஹௌஸனில் இருக்கும் திரு கந்தையா முருகதாசன் சார் அவர்கள் தங்கள் இல்லத்துக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். அவரும், அவர் மனைவி லைலாவும் மிகவும் தன்மையானவர்கள். முதல் முறை என்னைப் பார்க்க வரும்போதே அவர் எங்களுக்கு இனிப்புகளும் வடையும் கொண்டு வந்திருந்தார்கள். தங்கள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றார்கள்.
நான் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க மகனிடம் அவர் இல்லத்துக்குச் சென்று வர வேண்டும் எனக் கேட்டேன். தினமும் இருவரும் நடைப்பயிற்சி செல்வோம். ஆரோக்கிய உணவுகள், திருப்புகழ் பாராயணம், சாய் வரலாறு படித்தல்,மகனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து கொடுத்தல், அளவளாவுதல், ஹம் காமாட்சி அம்மன் கோவில், மகனது நண்பர்களின் வீட்டில் விருந்து, சாய் பூஜைகள், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார், நிம்மி சிவா, சந்திரகௌரி சிவபாலன் வீட்டிற்குச் சென்றது என நாளும் பொழுதும் ஓடி விட்டது. இவர்கள் எல்லாருமே தங்கள் அன்பினால் எங்களை மூழ்கடித்து விட்டார்கள்.
எனவே ஊருக்குச் செல்வதற்கு முந்தைய வாரத்தில் செப்டம்பர் முதல் வாரத்தில் ஓபர்ஹௌஸன் சென்று லைலா மேடத்தின் விருந்தில் களித்து அவர்கள் என் மகனுக்காகச் செய்து அனுப்பிய இனிப்பு பான்& இனிப்பு சிப்ஸ் ஆகியவற்றை வாங்கி வந்தோம்.
கீழிருந்து மேலாக ஃபோட்டோக்கள் அப்லோடியதால் உங்களுக்கும் லைலா மேம் கொடுத்த பான் & சிப்ஸ். எடுத்துக்கொள்ளுங்கள்.