முத்தக் குவளை
”மென் ஆர் ஃப்ரம் மார்ஸ். விமன் ஆர் ஃப்ரம் வீனஸ்.”
”இது எதுக்கு இப்போ சொல்றே” – எனக்கேட்டான் ஸாம். ”இல்ல நமக்குள்ள அப்பப்ப ஏற்படுற சுருதி பேதத்தை சொன்னேன்” என்றாள் முத்தழகி.
”ரொம்ப அவசரப்படுறீங்க. கடந்து போயிடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்கேன் முடியலையே” என்றாள் முத்தழகி.
”ஏன் கடந்து போகணும். மெதுவா அனுபவிச்சுப் போகலாம்தானே. எல்லாம் நம்ம கையில்தானே இருக்கு.”