மாதொருபாகன்
– ஒரு பார்வை.
மாதொருபாகன்
புதினம் புனைவாய் இருக்கும்வரை அதில் ப்ரச்சனையில்லை. அதில் யூக வரலாற்றுத் தரவுகள் இருக்கின்றன என்று கோடு காட்டினால் ப்ரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். 2010 இல் வெளிவந்த இந்த நாவலை இந்த வருடம் காரைக்குடி புக்ஃபேரில் வாங்கினேன்.
தேவாத்தா, மாச்சாமி, கூளாயி என்று தெய்வங்களையும் கரட்டூர், ஆட்டூர், அடையூர் என்று ஊர்களையும் குறிப்பிட்டு வெளியாகி இருக்கும் இந்நூல் பன்னிரெண்டாம் பதிப்பு. மாடர்ன் சிந்தனைகள் கொண்ட இன்றைக்கும் இதை இப்படியே குறிப்பிட்ட இனத்துக்கு சார்பாகக் காட்டினால் குத்திக் கொல்லத்தான் வருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
