இருவாட்சி
”தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது. தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது” என்ற பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது அந்த பாரில். ஒரு ஓரத்து இருட்டில் அமர்ந்திருந்த சாமின் கோப்பையை
நிரப்பிக் கொண்டிருந்தார் பாரின் ஊழியர்.
முட்டை, சிப்ஸ், வறுத்த முந்திரி, சிக்கன் மஞ்சூரியன் என்று பக்க பதார்த்தங்கள் டேபிளை நிரப்பி இருந்தன. அவ்வப்போது பிஸினஸ் ஆட்களுக்குப் பார்ட்டி கொடுப்பதற்கு அங்கே வந்து கொண்டிருந்த சாம் இப்போதெல்லாம் தினம் வருகிறான். ரெண்டு பியர், அதோடு வைன், விஸ்கி, ரம், பிராண்டி, வோட்கா ஏதாவது கலந்து குடிக்கிறான். முட்ட முழுக்கக் குடித்த பின் பதினோரு மணிக்குப் பார் மூடும் நேரம் கிளப்பி விடுகிறார்கள் ஊழியர்கள்.ட்ரைவர் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேரும் சாமைப் பார்த்துத் தேவிக்கு இப்போதெல்லாம் கண்ணில் ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.