தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி
தமிழ்க்கடல் திரு இராய சொ அவர்கள் எழுதிய நாம் ஆர்க்கும் குடியல்லோம் நூலானது மகாகவி பாரதியைப் பற்றியும் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்கள் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
பாரதி பாசறை அறக்கட்டளை வெளியிட்டு இருக்கும் இந்நூலில் 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வறக்கட்டளை மாணாக்கருக்கு பாரதி நினைவுநாளில் பல்வேறு போட்டிகள் நடத்தி பாரதி பிறந்தநாளில் பரிசுகள் வழங்கி வருகிறது. பாரதி பற்றிய நூல் ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதிலும் பெரும்பங்காற்றி வருகிறது.
