எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

கோதுதல்...



கோதுதல்..:-
*******************
ஒரு தூக்கம் வரும்போது
ஒரு சோகத்தை விழுங்கும் போது
ஒரு கோபத்திலிருந்து விடுபட
ஒரு துக்கத்தை வெளியேற்ற
தேவையாய் இருக்கிறது
தலை கோதுதல்.



தாத்தாவின் முடியடர்ந்த
மார்பில் படுத்தபடி
கதை கேட்டு உச்சுக்கொட்டி
முகம் பார்த்து மல்லாந்திருக்க
தலை கோதும் அவர் கைக்குள்
சுருண்டு வருகிறது
மந்திரக் கோலால்
தொட்டதுபோல் தூக்கம்.

படிப்பு மந்தமோ.,
திருமண பந்தமோ
பார்வையாலே கோதி
தாத்தா வருடும்போது
ஒரு சமரசம் வருகிறது
ஜெயித்து விடுவோமென.

நல்லெண்ணையும் சீயக்காயும்
தாத்தாவின் தலைப்பக்கம்
தொட்டுவைத்துத் திரும்பும் போது
துக்கம் கோதுகிறது
தொண்டையை.
கேவலாய் வெளிப்பட்டு.

தங்கம் உரசி நாவிலிட்டு
பெயரிட்டு அள்ளிக் கொண்டவர்
திரும்பப்போவதில்லை
எத்தனை முறை கூவினாலும்.
பயணப்பட்டுக் கொண்டிருந்தார்
கேளாச் செவியும் பாராமுகமுமாய்
பச்சை ஓலையில்..

அலமாரி லாக்கரைத்
திறக்கும் போதெல்லாம்
மறைந்த தாத்தா
சந்தனப் பாக்கெட்டுகளோடு
வார்த்தைகளால் கோதியபடி
இருந்தார் பாதுகாத்து
வைத்திருந்த பழைய கடிதங்களில்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 14.8.2011 கல்கியில் வெளிவந்துள்ளது:)

12 கருத்துகள்:

  1. நினைவுகளை கோதி விட்டுள்ளீர்கள் கவிதையாக, அருமையாக.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கவிதை கல்கியல் இடம்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    தரமான கவிதை யாத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையும் தலைகோதுவது போலவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. க்சல்கியில் பார்த்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. தரமான கவிதை ...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. கல்கியிலேயே படித்து மகிழ்ந்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்லெண்ணையும் சீயக்காயும்
    தாத்தாவின் தலைப்பக்கம்
    தொட்டுவைத்துத் திரும்பும் போது
    துக்கம் கோதுகிறது
    தொண்டையை.
    கேவலாய் வெளிப்பட்டு.

    அருமையான கவிதை.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கல்கியிலேயே வாசித்ததுமே ரொம்பப் பிடித்துப் போனது மனதுக்கு நெருக்கமாக.

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரமேஷ்., குணா., ஸ்ரீராம்., அருணா., ரெவெரி., கோபால் சார்., ரத்னவேல் ஐயா., குமார்., ராமலெக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...