எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஐந்தொகை - 3

*கர்ப்பக்கிரகத்துள்
பல்லியும் கரப்பானும்
உணவுப் போராட்டத்திலும்
உயிர்ப் போராட்டத்திலும்...

*யார் வரவுக்காக
இல்லாவிட்டாலும்
வாசலில் தினம் ஒரு கோலம்..


*தன் பசிக்கே
சோறு கிடைக்காத காக்கைகள்
விருந்தாளி வரவுக்குக் கரைவதாய்..

* பெயர்களில் எல்லாம்
ஒளிந்து கொண்டு
சாதி மதங்களின் அடையாளம்...

*எழுதி எழுதி இறக்கிய
சுமைகள் எல்லாம்
எப்போதாவது பார்க்கும் போது
ஏக்கத்துக்கு உரியதாகவும்..
எள்ளலுக்கு உரியதாகவும்..

இந்த கவிதை இளமை விகடனில்
26.7 2010 இல் வெளி வந்துள்ளது...

27 கருத்துகள்:

  1. ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமை, நன்றிகள்,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தேனம்மை நீங்கள் டுவிட்டரில் இருக்குறீர்களா..இது ஐந்தும் டுவிட்டுக்களாக நல்லா வரும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. என்னக்கா நீண்ட நாட்களாய் பதிவிடவில்லை...?

    இளமை விகடனில் கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்.


    //கர்ப்பக்கிரகத்துள்
    பல்லியும் கரப்பானும்
    உணவுப் போராட்டத்திலும்
    உயிர்ப் போராட்டத்திலும்...//

    நல்லாயிருக்கு ஐந்தொகையில் எல்லாமே... குறிப்பாக முதலாவது எல்லாவற்றும் மேலாக.

    பதிலளிநீக்கு
  5. *எழுதி எழுதி இறக்கிய
    சுமைகள் எல்லாம்
    எப்போதாவது பார்க்கும் போது
    ஏக்கத்துக்கு உரியதாகவும்..
    எள்ளலுக்கு உரியதாகவும்..

    எழுத்துக்கள் மட்டுமா. வாழ்ந்து முடித்த நாட்களும் தானே
    ஏக்கத்துக்கு உரியதாகவும்..
    எள்ளலுக்கு உரியதாகவும்..

    பதிலளிநீக்கு
  6. //கர்ப்பக்கிரகத்துள்
    பல்லியும் கரப்பானும்
    உணவுப் போராட்டத்திலும்
    உயிர்ப் போராட்டத்திலும்...//

    *//எழுதி எழுதி இறக்கிய
    சுமைகள் எல்லாம்
    எப்போதாவது பார்க்கும் போது
    ஏக்கத்துக்கு உரியதாகவும்..
    எள்ளலுக்கு உரியதாகவும்..//

    நிதர்சனத்து போராட்டங்களில் அழகாய் பயணிக்கிறது கவிதை வாழ்த்துகள் தேனக்கா...

    பதிலளிநீக்கு
  7. திரும்பிப் பார்த்தால் வாழ்க்கையே ஒரு ஏக்கம்தான் தேனக்கா.
    திரும்பக் கிடைக்குமா !

    பதிலளிநீக்கு
  8. *எழுதி எழுதி இறக்கிய
    சுமைகள் எல்லாம்
    எப்போதாவது பார்க்கும் போது
    ஏக்கத்துக்கு உரியதாகவும்..
    எள்ளலுக்கு உரியதாகவும்..

    ....உண்மை, அக்கா! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. //*தன் பசிக்கே
    சோறு கிடைக்காத காக்கைகள்
    விருந்தாளி வரவுக்குக் கரைவதாய்..
    // வரிகள் அழகு.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    :)

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. vi\\விகடன்ல உங்க படைப்பை பார்த்திருக்கேன்,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. நன்றீ கார்த்திக் ., வேலு., சங்கர்.,விக்னேஷ்வரி., மேனகா., ராம்ஜி.,வெற்றி., நேசன்., அக்பர்.,குமார்.,ரமேஷ்., பாலா சார்.,ஜோதிஜி.,அஷோக்., ஜெய்.,சக்தி., கனி., ஹேமா.,சித்ரா., ஸாதிகா., ஸ்வேதா.,கலாநேசன்., சசி., மயில்.,செந்தில்.

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...