எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

அடுத்த தடத்துக்காய் ..................

உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..

கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....

உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,

புதன், 28 ஏப்ரல், 2010

நான் நிலவு

துரத்தத் துரத்தத்
தொலையாமல் ..
தொடர்ந்துகொண்டே
வெட்கம்...

யாமமா...?
இன்னொரு ஜென்மமா..?
பிறக்க வைத்தாய்..
என்னைப் புதிதாய்...

தளிரா..?
வெல்வெட்டா.?
உணரக் கிடைக்கவில்லை..
என் உதடுகள்...

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

யாளியும் ட்ராகனும்

பார்த்தால்தானா.....
நினைத்தால் கூட
கோணங்கியாய் மாறி
ஒரு தீம்தரிகிட...
அல்லது ததிங்கிணத்தோம்...

சாம்பற் பூத்த யாளி
கோயில் இருட்டு மூலையில்..,
செந்தீயுமிழும் ட்ராகன்
வளைவு நெளிவுகளுடன்...

கண்ணாடியெனக் கல்லெறிய
நீராய் விழுங்கியது...
அதிர்ர்ர்ர்ர்ர்வுகள் அலையலையாய்..

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

நமக்கு மட்டுமேயான அம்மா

கருவறைக்குள் இருந்து
வெளிவந்தோம்
முந்தானையால்
போர்த்தப்பட்டு......

தாயோ சகோதரியோ
மனைவியோ தோழியோ
அது ஆறுதலாய்...

கர்ப்பக்கிரகம் சுமந்த
தெய்வம் நம் அம்மா
அவளுக்குத் தாய்மை
மட்டுமே அணிவித்துப்
பார்க்கும் நாம்...

திங்கள், 12 ஏப்ரல், 2010

க்ரீடங்களும் கடையேழு வள்ளல்களும்


அய்யாவுக்கென்றும்.,
அம்மாவுக்கென்றும்.....மட்டுமல்ல.,
அக்காவுக்கென்றும் ..................
சிம்மாசனமும் க்ரீடங்களும்
செங்கோலும் .,ராஜ்யமும் .,
பூங்கொத்தும் .,பூமாலைகளும்.,
வெற்றிக் கோப்பைகளும் .,
நியாயச் சுத்தியலும் ஈந்த
அன்பு நெஞ்சங்களுக்கு .,
அவார்டுகளை அள்ளி வழங்கிய
கடையேழு வள்ளல்களுக்கு நன்றி...!!
Related Posts Plugin for WordPress, Blogger...