எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
95 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
95 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 செப்டம்பர், 2018

மகனதிகாரமும் மாத்தூர் விருட்சமும்.

1881. சிகப்புக் கண் கொண்டு விழிக்கிறது புண். சுய சொறிதல் வலித்தாலும் உயிர்த்தல் உணர்கிறது மனம்.

1882. நெறி பிறழ்ந்த காதல்களையே அதிகம் பேசி இருந்தாலும் லா ச ரா , தி ஜா ரா, ஸ்டெல்லா புரூஸ், தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் எழுத்தின் மாய வசீகரம் என்ன. எல்லாவற்றையும் ஏற்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறதே அதுதான் அதன் வலிமையா.

1883. மழையின் துளியில் லயமிருக்குது. துளிகள் இறங்கி குடைபிடிக்குது..

1884. எனக்குப் பிடித்த ஸ்தலமும் விருட்சமும் :) எந்த ஊர்னு சொல்லுங்க பார்ப்போம். :)

1885. சிலவற்றைப் படித்தால் மனம் துணுக்குறுகிறது, இப்படியும் உண்டாவென. கட்டாய உறவுகள் குழந்தைக் கொலையில் முடியுமா.. கடவுளே.

Related Posts Plugin for WordPress, Blogger...