1881. சிகப்புக் கண் கொண்டு விழிக்கிறது புண். சுய சொறிதல் வலித்தாலும் உயிர்த்தல் உணர்கிறது மனம்.
1882. நெறி பிறழ்ந்த காதல்களையே அதிகம் பேசி இருந்தாலும் லா ச ரா , தி ஜா ரா, ஸ்டெல்லா புரூஸ், தஞ்சை பிரகாஷ் ஆகியோரின் எழுத்தின் மாய வசீகரம் என்ன. எல்லாவற்றையும் ஏற்க முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள முடிகிறதே அதுதான் அதன் வலிமையா.
1883. மழையின் துளியில் லயமிருக்குது. துளிகள் இறங்கி குடைபிடிக்குது..
1885. சிலவற்றைப் படித்தால் மனம் துணுக்குறுகிறது, இப்படியும் உண்டாவென. கட்டாய உறவுகள் குழந்தைக் கொலையில் முடியுமா.. கடவுளே.