எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்.

 1601. கழுத்துருவுக்குப் பொன் தட்டல் :- கல்யாணம் பேசி முடித்துக் கொள்ளும்போது ஆசாரியிடம் பவுன் காசைக் கொடுத்து சாஸ்திரத்துக்கு மூன்று முறை தட்டச் சொல்லி வாங்கிக் கொள்வார்கள். பெண்வீட்டார் ஏற்கனவே கழுத்துரு செய்துவைத்துவிடுவதால் இந்தப் பொன் தட்டுதல் சாஸ்திரத்துக்குத்தான். பெண்வீட்டாருக்கு மாப்பிள்ளைவீட்டார் தோதுக்குத் தகுந்தாற்போல 1, 3, 5, 7, 9, 11, 16 என்ற அளவில் பவுன் காசு கொடுப்பார்கள்.

1602. பூரங்கழித்தல் :- திருமணத்தன்று காலை நடைபெறும் முதல் நிகழ்ச்சி இது. பெண்ணைக் காக்கும் பூரம் என்னும் காவல் தெய்வத்திடம் பெண்ணைக் காக்கப் புருஷன் வந்துவிட்டார் அதனால் நீ நீங்கிக் கொள்வாயாக என்று செய்யப்படும் சடங்கு. ( இதுவே பெண் பூப்படையும்போதும் பூரம் என்னும் தெய்வத்தைக் காவலாக நியமிப்பதுபோல் அமையும் ) அதிகாலையில் தலைக்கு நீராடச் செய்து திருமணப் பெண்ணைச் சாமி வீட்டின் எதிரில் போடப்பட்ட பாப்பாரக் கோலத்தின்மேல் தடுக்குப் போட்டுக் கிழக்குப் பார்த்து நிற்கச் செய்து அத்தை, மாமி உறவுடைய பெண்கள் பூரம் கழிப்பார்கள். இதற்காகப் பெண்ணின் உடலில் ஏழு இடங்களில் ( தலை, தோள்பட்டை, மடித்த முழங்கைகள்/இடுப்பு, இரண்டு மேற்பாதங்கள்) வேப்பிலை வைத்து அதன்மீது அடை அல்லது பிஸ்கட்டை வைத்து இரும்புச் சத்தகத்தாலோ நொச்சி அல்லது வேப்பங்குச்சியாலோ தட்டி விடுவார்கள். இதன் பிறகு விநாயகபூசை, வர்ணபூசை செய்து புரோகிதர் பூரம் கழிப்பார்.

Related Posts Plugin for WordPress, Blogger...