பங்களா தோட்டத்தில்
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...
சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...
மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...
சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...
மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..
பூத்து இருந்தது
மரத்தில் அங்கங்கே
நாகங்கள் போல்...
சிறுவயது வியப்பு ..
செறிந்த மகரந்தங்களின்
காவலாய் ஒரு குடை
மழைத்தடுப்பாய்...
மலைப்பாம்பு சுற்றியதான
மணிப்பிளாண்ட் போல்...
மழையில் பூத்த
மரக்காளான்களும் குடையுடன்...
சிவன் சூடுவதா
மன்மதனின் அடையாளமா
பார்த்தால் பரமபதப் பாம்பு...
மேலே ஏற ஏற
உன்னைக் கீழிறக்கிக்
கொண்டு இருக்கிறது
அதன் கடிவாய்..