ஜெ ,சோ இருவரும் எனக்கு மிகப் பிடித்த ஆளுமைகள். முதல்வர் ஜெயின் மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்ட மறுநாளிலே அவரது வெல்விஷர் சோ அவர்களும் மறைந்தது யதேச்சையான ஒற்றுமை.
ஜெ - தைரியம் என்பதை மனதில் பச்சை குத்திய பெயர். சோ - பத்ரிக்கை உலகில் என்னைக் கவர்ந்த மனிதர். தைரியமாகக் கருத்துக்களை முன் வைத்தவர். பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
இருபெரும் துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவரையும் எனக்கு மிகப் பிடிக்கும். அசைக்கமுடியாத மாபெரும் தலைவியாக, பெண்களின் உந்துசக்தியாக, அனைவரின் பேரன்பையும் பெற்றவராக, தன்னம்பிக்கையுடன் செயலாற்றுபவராக, தன்னிச்சையாக தீரத்துடன் செயலாற்றுபவராக இன்னும் பலவாக இருந்த ஜெ , அன்னை இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு எனக்குப் பிடித்த தலைவியாவார். தனித்திருந்து மாணவியர் நலனுக்காக வாழ்ந்த எங்கள் கல்லூரி முதல்வர் சகுந்தலா போல, எங்கள் பேராசிரியைகள் போல தன் சாதனைகளாலும், மக்கள்நலப் பணிகளாலும் என்னுள் பிரமிப்பை விளைவித்தவர் ஜெ அம்மா.
ஜெ - தைரியம் என்பதை மனதில் பச்சை குத்திய பெயர். சோ - பத்ரிக்கை உலகில் என்னைக் கவர்ந்த மனிதர். தைரியமாகக் கருத்துக்களை முன் வைத்தவர். பலருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்.
இருபெரும் துறைகளில் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த இருவரையும் எனக்கு மிகப் பிடிக்கும். அசைக்கமுடியாத மாபெரும் தலைவியாக, பெண்களின் உந்துசக்தியாக, அனைவரின் பேரன்பையும் பெற்றவராக, தன்னம்பிக்கையுடன் செயலாற்றுபவராக, தன்னிச்சையாக தீரத்துடன் செயலாற்றுபவராக இன்னும் பலவாக இருந்த ஜெ , அன்னை இந்திரா காந்தி அம்மையாருக்குப் பிறகு எனக்குப் பிடித்த தலைவியாவார். தனித்திருந்து மாணவியர் நலனுக்காக வாழ்ந்த எங்கள் கல்லூரி முதல்வர் சகுந்தலா போல, எங்கள் பேராசிரியைகள் போல தன் சாதனைகளாலும், மக்கள்நலப் பணிகளாலும் என்னுள் பிரமிப்பை விளைவித்தவர் ஜெ அம்மா.
