எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 25 நவம்பர், 2020

ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்.

 161. 1731. கமறுதல், காந்துதல், காய்வான்/ள்.. - தாளிக்கும் கார வாசனை பட்டுத்தொண்டையைச் செறுமுதல் கமறுதல் எனப்படும். தீயைக் கொறைச்சு வையி. கமறுது என்பார்கள். மிளகாய்த்துவையல் போன்றவற்றை அம்மியில் அரைத்தால் கை சுடுவதுபோல் காந்தல் = எரிச்சல் எடுக்கும். காய்ச்சல் அடிச்சாலும் தொட்டுப் பார்த்தால் உடம்பு சுடுவதைக் காந்துது என்பார்கள். சட்டியில் அடிப்பிடித்ததையும் காந்தல் என்பார்கள். அடுத்தவர் வாழப் பொறுக்காதவரை அவன்/ள் அடுத்தவுகளைப் பார்த்துக் காய்வான்/ள்( கடுப்பாவான்/ள், எரிச்சலாவான்/ள் , கோபப்படுவான்/ள்)  என்பார்கள். 

1732*நறுங்கிப் போய் - வயசுக்கேத்த வளர்ச்சி இல்லாமல் இருப்பவரை அது நறுங்கிப் போய்க் கிடக்கும் என்பார்கள். 

1733*பாய்ச்சுருட்டு - மெத்தைச் சுருட்டு பாய்ச்சுருட்டு . நான்கைந்து பாய்களை ஒன்றாக அடுக்கிச் சுருட்டிக்கட்டி வைப்பதுதான் பாய்ச்சுருட்டு. 

1734*சிலாகை - மரச்சாமான் பெயர்ந்து வந்தால் சிலாகை வந்திருச்சு என்பார்கள். முள்போல் குத்திவிடும் என்பதாலும் சாப்பாட்டில் விழுந்து விடலாம் என்பதாலும் அது பயன்பாட்டுக்கு ஆகாது என்று அர்த்தம். 

1735*வரட்டுவரட்டுன்னு - வரளித்தனமாக இருப்பது. வரட்டு என்று வெறிச்சோடி இருப்பது. இருப்பதை எல்லாம் சுரண்டி வரட்டி எடுப்பது. 

1736*மலைமுழுங்கி மகாதேவன் - பேச்சு வழக்கில் ஒருவரைத் திட்டப் பயன்படுவது. எவ்வளவு கொடுத்தாலும் திருப்பியே தரமாட்டான். அவன் ஒரு மலைமுழுங்கி மகாதேவன் என்பார்கள். 

1737*அத்துவிட்டாச்சு - திருமணம் ஆனபின் தம்பதியருக்குள் மனம் ஒத்துவரவில்லை எனில் இருவரும் பிரிவதை அத்துவிட்டாச்சு என்பார்கள். பொதுவாக ஆண் பெண்ணை விலக்கி வைப்பதை அத்துவிட்டாச்சு என்பார்கள். திருமண பந்தத்தில் இருந்து ( தாலிக்கொடியை அத்துவிடுவதைப் போல ) வெட்டி விட்டாச்சு, அத்து விட்டாச்சு என்பார்கள்.

1738*ஜெகஜ்ஜாலப்புரட்டன் - ஒரு விஷயத்தைச் செய்யாமலேயே அதைச் செய்துமுடித்துவிட்டதாக நடிப்பவர். அல்லது தான் செய்த சிறுகாரியத்தையும் பெரிதாகக் காட்டுபவர். பொய் சொல்லி ஏமாற்றுபவர். பொய்யும் புரட்டுமாகச் சொல்லிப் பணம் பறிப்பவர் அல்லது பிறரை ஏமாற்றித் தன் காரியத்தை முடித்துக் கொள்பவர். உலகத்தையே புரட்டி விடுவதாகச் சொல்பவரை ஜெகஜ்ஜாலப் புரட்டன் என்பார்கள். 

1739*இரிசி மட்டை - மனதில் இரக்கம் இல்லாதவள். நியாயம் தர்மத்துக்குக் கட்டுப்படாதவள். வல்லடி வம்படி செய்பவள். இரிசித்தனமாக என்றால் இரக்கமில்லாமல் என்று அர்த்தம். மட்டை என்பது பொதுவாக பெண்களை கோபமாகவோ செல்லமாகவோ திட்டும் சொல். குந்தாணி மட்டை என்றால் குந்தாணி போல குண்டாக இருக்கும் பெண்ணை/மகளைத் தாய் அல்லது பாட்டி செல்லமாகத் திட்டும் சொல். 

1740*மெச்சிக்குவா - தன்னைத்தானே மெச்சிக்குவா. என்றால் தன்னைத்தானே பாராட்டிக்குவா என்று அர்த்தம். மெச்சுதல் - புகழ்தல், பாராட்டுதல், உயர்வாகச் சொல்லுதல். 

1741*வெருட்டிப்புடுச்சு - பயம் உண்டாக்குதல். வெருட்டுதல். ஒருவிஷயத்தைப் பார்த்துப் பயந்தால் அது வெருட்டிப்புடுச்சு என்பார்கள். இருட்டு அல்லது இருளான இடத்தில் நடந்து வருவது போன்றவை. பிறர் நமக்கு உண்டாக்கும் துன்பத்தையும் வெருட்டுதல் என்பார்கள். 

1742*அருள் அடைஞ்சு - அதிகம் சாமி கும்பிடுபவருக்கு சாமி வந்தால் அதை அருள் அடைஞ்சு என்று சொல்வார்கள். அருள் வந்திருச்சு அல்லது அருளடைஞ்சு இருக்கு முகம் என்பார்கள். தெய்வீகக் களையாகப் பொலிவுடன் திகழ்பவரையும் , சாமியாடிகளையும் அவர் முகம் அருள் அடைஞ்சிருக்கு என்பார்கள். 

1743*இருள்வாங்கிருச்சு முகம் - மரணத்தைக் கண்டு பயப்படுதல். அல்லது மாரகத்துக்குச் சமமான ஏதோ ஒரு அவமானத்தைக் கண்டு துன்புறுவதால் முகம் இருளடைந்து கறுப்பாகி விடும். இதைத்தான் இருளடைஞ்சிருச்சு அல்லது இருள் வாங்கிருச்சு என்பார்கள். 

1744*காலக்கொடுமை - ஏதோ ஒரு நடக்கக் கூடாத விஷயம் நடந்தால் அதைக் காலக் கொடுமை என்பார்கள். அகால மரணம், துர்ச்சம்பவம், எதிர்பாரா விபத்து, கடன், நல்லோருக்கு அவமானம் போன்றவை ஏற்பட்டால் அதைக் காலக் கொடுமை என்பார்கள். 

1745*வேக்காளம் - வெந்து போதல். வயிற்றுப் புண் இருந்தால் வாய் வேக்காளம் ஆகும். இதேபோல் ஒரு விஷயத்தை எண்ணி எண்ணி வருந்துவதாலும் வயிற்றுப் புண் வாய்ப்புண் வரும். மனசு நொந்து போய் கோபமாய்ப் பேசுவதையும் வேக்காளத்துல பேசிப்புட்டாக என்பார்கள். அவ்வளவு வேக்காளம்,என் வேக்காளம் உன்னைச் சும்மா விடாது என்பார்கள். 

1746*வெகண்டை - நையாண்டி. சூது வாது அறியாமல் கிண்டலடிப்பவர். . வெகண்டை என்றால் வெள்ளந்தி. வெகண்டை என்றால் அப்பாவியாகப் பேசுபவர். 

1747*குதுகுதுன்னு - உடம்பு வெப்பநிலை உயர்வது. மனதும் உடலும் சுகவீனமாய் இருப்பது. கதகதப்பாய் காய்ச்சல் வருவது போல் இருப்பது. காங்கை. 

1748*வரளித்தனம் - சிக்கனம் என நினைத்துக் கொண்டு கஞ்சத்தனமாக இருப்பது. எல்லா விஷயத்துக்கும் கணக்குப் பார்ப்பது. எல்லா நல்லவற்றையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது. யாருக்கும் எதையும் கொடுக்க விரும்பாத் தன்மை. தனக்கு மட்டுமே வைத்துக்கொள்ளும் சுயநலம். 

1749*பொருபொருன்னு - மொறு மொறுப்பாக சமைப்பதையும் பொருபொருன்னு சொல்வார்கள். கரகரப்பாக என்றும் எடுத்துக் கொள்ளலாம். சீடையும் தேன்குழலும் நல்லா பொருபொருன்னு இருந்துச்சு என்பார்கள். நன்றாகப் பொரிந்திருப்பது. ருசியான தின்பண்டம். 

1750*உண்டன, ஒள்ளத்தி - அதிகம், குறைவு. உண்டன என்றால் பெரும் அளவு, இது மனதாலும் சரி கொடுப்பதாலும் சரி உண்டன என்று குறிக்கப்படும். ஒள்ளத்தி என்றால் மிகச் சிறிய அளவு. மேலும் யாருக்கும் எதையும் கொடுக்க விரும்பாத மனநிலை. ஒருவரின் தேவைக்கு மிகக் குறைவாகக் கொடுப்பது. தனக்கே கூட செலவழித்துக் கொள்ள விரும்பாதவர்கள் இருப்பதில் ஒள்ளத்தி மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.


1. ஆச்சியும் அய்த்தானும் 


2. அப்பச்சியும் ஆத்தாவும்.


3. அயித்தையும் அம்மானும்.


4. ஆயாவின் வீடு. 


5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.


6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES


7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )


8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )


11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )


12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.


13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI


14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1


15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.


16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3


17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.


18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5


19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.


20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.


21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8


22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9


23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 


24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 


26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 


27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 


28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.


29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 


30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.


31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.


32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.


33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  


34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.


35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 


36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.


37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும். 


38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும். 


39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.


40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.


41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.


42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.


43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 


44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 


45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.


46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)


47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )


48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.


49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும். 


50. கோவிலூர் மியூசியம். 


51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-


52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும்ரெங்காவும்.


53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.


54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..


57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.


59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.


60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 


61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.


62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.


63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.


64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 


65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 


66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 


67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்


68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 


69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 


70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.


71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்காலஎழுத்துக்களும்.


72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!


73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 


74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 


75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 


76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 


77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 


78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும்கிருஷ்ணனும். 


79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும்சரஸ்வதியும். 


80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும்அகத்திணையின் அகம் :-


 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.


82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.


83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச்சடங்குகளும்.


84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 


85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-


86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 


87. இந்த சீர் போதுமா ?! 


88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 


89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 


90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 


91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.


92. இனியெல்லாம் பிஸினஸே


93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.


94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.


95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடிகைவேலைப்பாடு.  


96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.


97. இன்னும் சில மரச்சிற்பங்கள்.


98. காரைக்குடிச் சொல்வழக்கு :- புரியாதவளும் பொல்லாதவளும்.


99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .


100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடிவீடுகள்.


101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்பவேலைப்பாடுகளும்.


102. பழம்பெரும் வீடுகள்.


103. காரைக்குடியில் துபாய் நகர விடுதி.


104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.


105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.


106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.


107. காரைக்குடிச் சொல்வழக்கு - ஒவகாரமும் ஒவத்திரியமும்.


108. பொங்க பானை - பால் பொங்கிருச்சா - அவள் விகடனில்


109. பொங்கல் பானையும் கொப்பி கொட்டுதலும். :-அவள் விகடனில்.


110. காரைக்குடிச் சொல்வழக்கு :- குடி ஊதுதலும் கொட்டிக் கொடுத்தலும்.


111. காரைக்குடிச் சொல்வழக்கு :- சிவபதவியும், சிவப்பு மாத்தும்.


112. காரைக்குடிச் சொல்வழக்கு :- அப்புராணியும் உக்கிராணமும்.


113. காரைக்குடிச் சொல்வழக்கு:- பச்சநத்தமும் தொருதொருத்தபழமும்.


114. காரைக்குடிச் சொல்வழக்கு :- மாப்பிள்ளை அறிதலும் பொண்ணெடுக்கிக்காட்டுதலும்.


115. காரைக்குடிச் சொல்வழக்கு:- ஒளட்டுதலும் ஒமட்டுதலும்.


116. காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.


117. காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.


118.காரைக்குடிச் சொல்வழக்கு. லண்டியன் விளக்கும் லஸ்தர் விளக்கும்.


119. காரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்.


120. காரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.


121. காரைக்குடி, கானாடுகாத்தான் வீடுகள்.


122. கண்டனூர், கானாடுகாத்தான், தெக்கூர் வீடுகள்.


123.காரைக்குடிச் சொல்வழக்கு :- வக்கூடும் சத்தகமும்.


124.காரைக்குடிச் சொல்வழக்கு :- ஊட வாரதும் நெருக்குவெட்டும்.


125.காரைக்குடிச் சொல்வழக்கு. சிலேட்டு விளக்கும் சாரட்டும்.


126.காரைக்குடிச் சொல்வழக்கு. கா(ல்)ப்பொறப்பும் தோமாலையும்


127. காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.


128. காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.


129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 


130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.


131.காரைக்குடி முனியையா கோயில்.


132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.


133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.


134. வட்டாரப் பழமொழிகள் - 1.


135. வட்டாரப் பழமொழிகள் - 2.


136. வட்டாரப் பழமொழிகள் - 3.


137. வட்டாரப் பழமொழிகள் - 4.


138. வட்டாரப் பழமொழிகள் - 5.


139. வட்டாரப் பழமொழிகள் - 6.


140. வட்டாரப் பழமொழிகள் - 7.


141. வட்டாரப் பழமொழிகள் - 8.


142. வட்டாரப் பழமொழிகள் - 9.


143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.


144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.


145. மாத்தூர் - சில சிறப்புகள்.


146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.


147. பேர் பெற்ற வீடு.


148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.


149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.


150. பூசைச் சாப்பாடு.


151. அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.


152. பூரங்கழித்தலும் பெண் எடுக்கிக் காட்டுதலும்


153. மணவறைச்சடங்கும் மாமவேவும்.


154. பணத்திருப்பேடும் குடிவழியும்.


155. ஸ்ரீதனப் பணமும், காய்ச்சி ஊற்றுதலும்


156. பிள்ளை எடுக்கிக் கொடுக்கும் துண்டும் சிட்டிச்சாமான்களும்.


157. குளுதாடிகளும் காய்கறி மரவைகளும்.


158. நாலு கட்டு உள்ள கோட்டையூர் வீடு.


159. படைப்பு வீடு சில க்ளிக்ஸ்.


160. முன்னோர்களின் ஓவியங்களும் ஓவியப் படங்களும்.


161. ஜெகஜ்ஜாலப் புரட்டனும் இரிசி மட்டையும்


 


டிஸ்கி :- இவற்றையும்பாருங்க.


 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 


2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....


3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை


4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.


5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.


6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்


7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்


8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.


9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.


10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..


11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.


12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 


13. வைரமே வைரம்...


14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள். 


15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை


16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 


17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...